பைக் பஞ்சர் ஆச்சுனா என்ன பன்னலாம்..?


         
   பொதுவா பார்த்திங்கனா இந்த டூ வீலர் அவசரமா எங்கயாவது போகும் போது தான் காலை வாரி விடும். அப்படி ஆளே இல்லாத இடத்தில உங்க பைக் பஞ்சர் ஆச்சுனா தள்ளிட்டு போகனுமே அப்படிங்கற கவலைய விடுங்க. இந்த பிரச்சனைய ஈசியா சமாளிக்க என் அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.







நேற்று இரவு நான் வழக்கம் போல எனது வேலை முடிந்ததும் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தேன், வழியில்  தோழி பிரபா தனது அலுவலக பணி முடிந்ததும் வீட்டிற்கு செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அருகே சென்றதுமே எனை பார்த்து புன்னகைத்தார். 

   வாங்களேன் நான் டிராப் பன்னிடுறேன்னு அவரையும் அழைத்து கொண்டு எனது டூ வீலரில் கிலம்பினேன். 

என்னங்க ஆயுத பூஜை எல்லாம் எப்படி போச்சு..?

ம்ம்ம்... எங்க கம்பனியில் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து சாமி கும்பிட்டோம். ஆன அதுக்கு முந்தைய நாள் மட்டும்.. அப்பப்பா...  கம்பனியை முழுசுமா சுத்தம் பன்றதுக்குள்ள பென்டு கழண்டுருச்சு..

அப்படியே பேசிக்கொண்டே சிறிது தூரம் சென்றிருப்போம்..

புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.........

எப்படியோ மானத்தை வாங்கரதுக்குனே காத்திருந்தா போலே வண்டி பஞ்சர் ஆகிவிட்டது..

ஒரு நமட்டு சிரிப்புடன். கிழே இறங்கிய பிரபா..  என்ன சார் நான் பாஸ்லயே போயிருப்பேன்.. ம்ம்ம்ம்ம்.

கவலை படாதிங்க.. பத்து நிமிசத்தில் பஞ்சர் பாத்திடலாம்ம்...

எப்படி..?

வேற எப்படி பாக்குறது..? எல்லாரையும் போல வண்டிய உருட்டிகிட்டே ஏதாவது ஒர்க்ஸ் ஸாப்க்கு போக வேண்டியதுதான்.

எங்க நேரம் ஆயுத பூஜையை ஒட்டி எந்த ஒர்க்ஸ் ஸாப் -ம் திறக்கல.. .

அப்ப தான் ஒரு முடிவிற்கு வந்தேன்..

*( ரொம்ப பில்டப் பன்னுற விஷயங்கள் எப்பவுமே மொக்கையா இருக்கும்னு தெரிஞ்சும் வந்து பார்க்குற உங்களோட தைரியம் ரொம்ம பிடிச்சிருக்கு.. இருந்தாலும்.. .. )


அப்ப தான் ஒரு முடிவுக்கு வந்தேன்..

இனி ஒர்க்ஸாப் எல்லம் எதுமே இருக்காது.. பேசாம, வண்டிய தள்ளிகிட்டே ஏதாவது பேசிட்டே போகலம் என்றேன்.,

பிரபாவும்.. ம் சரி வேற வழி..?

சொல்லுங்க உங்க பிஸினஸ் எப்படி போகுது..? நீங்க எதோ புது பிஸினஸ் ஆரம்பிக்க போறதா சொன்னீங்க..?

ஆமா//

எந்த மாதிரியான பிஸினஸ்..?

புதுசா இருக்கனும்,, நாம் தான் அந்த பிஸினஸை ஆரம்பிக்க வேனும்..

இது என்ன ஒன்னுமே புரியல..

அதாவது நான் ஆரம்பிக்க போற பிஸினஸ் பாத்திங்கன்ன நம்ம வழக்கமா பன்னுற பிஸினஸ் போல இருக்க கூடாது.. நம்ம மக்களுக்கு அது புதுசா இருக்கனும்..  நாம தான் அதை முதன் முதலா ஆரம்பிக்கனும்.

அதாவது நீங்கதான் அந்த தொழிலின் தந்தையா இருக்கனும் அப்படித்தானே..?

ம்ம்ம்ம். அப்படின்னு சொல்லலாம்.. ஆன பார்திங்கன பிரபா என்னைய பொருத்த வரை நாம பணம் சம்பாதிப்பதை காட்டியும் வருங்கால சந்ததியினர் நம்ம பேர சொல்லும் படி ஏதாவது ஒரு விசயத்தை செய்துவிட்டு போகனும்.

சரிதாங்க.. ஆன நாம ஒரு தொழிலையையோ அல்லது ஒரு சிந்தனையையோ கண்டுபிடிச்சு அதிலே வெற்றி பெருவதென்பது சாதாரண விசயமில்லையே..?

ஆமா.. ஆன, விடா முயற்சி இருந்தால் கண்டிப்ப நாம சாதிச்சு காட்ட முடியுமே..?

நீங்க ஒரு நல்ல தொழில்முனைவோரா இருந்தாலே நீங்க சாதித்ததாக அர்த்தப்படுமே..?

கண்டிப்பா.. அதைக் காட்டிலும் நான் ஒரு புது முயற்சியில் தொடங்கி வெற்றி பெருவதையே விரும்புகிறேன்..

   இப்ப நீங்க செய்யுற தொழில் வாய்ப்பானது உங்கள் பொருளாதாரத்தையும் உயர்த்தும். உங்கள் புகழையும் உயர்த்தும். ஆன, புதுசா ஒரு முயற்சியில் இறங்கும் போது அதில் வெற்றி பெற்றாலே தவிற புகழும், பொருளும் கிடைப்பதில்லை..? அப்படி பார்த்த இங்க புதுசா ஒரு விசயத்தை தோற்றுவிப்பதற்காக லட்சம் பேர் முயற்சி செய்யிறாங்க அதில ஒருத்தர் மட்டும் தானே வெற்றி பெற முடியும்.. நீங்க வெற்றி பெரும் ஒருத்தரை உந்துதலா எண்ணி உங்க வாழ்க்கையை பணயம் வைப்பது முட்டால் தனமான விசயம் தானே..?

இல்லைங்க பிரபா.. நீங்க சொல்வது முற்றியும் தவறு..
....மே பி..   நீங்க சொல்வது போல முயற்சி செய்யும் லட்சம் பேரில் ஒருத்தர் மட்டும் தான் வெற்றி பெற முடியும்.  ஆன அந்த ஒருத்தர் நாம தான் என்கின்ற தன்னம்பிக்கையை நீங்க முட்டால் தனம் என்பது மிகவும் தவறாகும்..

இப்ப,, நாம ஒவ்வொருவரும் காலைல வீட்டை விட்டு வரும் போது என்ன நினைச்சுட்டு வருகின்றோம்.? வேலைக்கு போய்விட்டு எப்படியாச்சும் சீக்கரமா வீட்டுக்கு வரனும், பாப்பாவ கொஞ்சனும்,  சமையல் செய்யனும் அப்படித்தானே.... அதில்லாம,, ஹாஸ்பிடலுக்கு அடிபட்டு போக போறோம்ன்னா  நினைக்கிறோம்..? ஏன்னா... தினம் தினம் நம சாலையில் போகும் போது யாரவது ஒருத்தர் விபத்தில் தன் உறுப்புகளையோ.. அல்லது உயிரையோ இழக்கின்றார்கள். அப்படின்னா.. அந்த ஒருத்தர் நாமாக கூட இருக்கலாம் அல்லவா..? ஏன் நாம அதைப் பற்றி கவலை படாமல் வீட்டை விட்டு கிலம்புகிறோம்..?

ஒரு விசயத்தை செய்யும் போது ஆயிரம் தடைகள் எப்படிப் பட்ட வழிகளிலும் வரலாம்..? அதை சமாளிக்கும் தைரியத்தை நாம் தான் வளர்க்க வேண்டும்.. அதை விட்டு விட்டு நாம் தோற்று விடுவோமே என்று பயப்பட ஆரம்பித்தால் ஒவ்வொரு விசயத்திற்காகவும் பயந்து கொண்டே இருக்க வேண்டியது தாங்க..

ம்ம்ம். நீங்க சொல்வதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆன வீணா எதுக்கு மெனக்கெடுவானேன்னு தான் அப்படி சொன்னேன்..

இல்லைங்க.. வீண் என்கின்ற வார்த்தையினை தவிற எதுவுமே இந்த உலகத்தில் வீண் இல்லைங்க..

    நீங்க நினைச்ச மாதிரியே எல்லோரும் நினைச்சிருந்தாங்கன்ன இந்த உலகத்தில் மாற்றமே எதுவும் வந்திருக்காது.. நமக்கு தெரிந்த மட்டுமே எடிசனும், கிரகாம்பெல்லும் மெனக்கெட்டு உழைக்க தவறி இருந்திருந்தால் உலகிற்கு முக்கியமான இரு விசயங்களான லைட்டும், தொலைப்பேசியும் வந்திருக்குமா..?
இன்னைக்கு உலகையே தன் உள்ளங்கையில் வைத்திருக்கும் கைப்பேசி இன்றைய உருவத்திற்காக எத்தனை பேரோட உழைப்பையும் நேரத்தையும் சுரண்டியிருக்கும்..?  இன்னைக்கு நாம செய்யுற ஒரு விசயத்துக்காக இன்னும் பல வருடங்களில் வர விருக்கும் மற்றவர்களுக்கும் பயனளிக்க கூடியதாக இருக்கும் பட்சத்தில் எப்படிங்க வீண் என்கின்ற வார்த்தை முலைக்கும்..?

பஞ்சர் கடை இன்னும் வரலைங்க.. 

( கடைய கண்டு பிடிக்கிற வரைக்கும் இப்படியே வண்டிய தள்ளிக்கிட்டு ஏதாவது பேசிக்கிட்டே போங்க..? பஞ்சர் பத்தி கவலையே பட வேண்டியதில்ல.. )
(சிங்கிளா போகும் போது பஞ்சர் ஆச்சுனா..?
.... அதுக்கும் கவலை வேண்டாம்.. இதை விட சூப்பர் ஐடியா அடுத்த பதிவில் வச்சிருக்கிறேன்ன்ன்ன்ன்ன் )








1 comment:

  1. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...
    அப்பப்பா......
    கண்ணை கட்டுதே...............

    ReplyDelete