வாங்க தொழில் செய்யலாம்--- திட்டமிடல் (Planning)

தொழில் செய்ய முனைவோருக்கான சிறப்பான பதிவாக இருக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் இந்த பதிவினை திட்டமிட்டுள்ளேன். இது என்னுடைய கருத்துக்களே ஆகும். பல மேதைகள் இதை பற்றி விரிவாக சொல்லியிருந்தாலும் எனது பார்வையில் உங்களுக்காக....

திட்டமிடல் ( PLANNING) :
பொதுவாக தொழில் முனைவோருக்கான திட்டமிடல் என்பது ஒரு தொழிலை தொடங்குவது குறித்தான தெளிவான அனுகுமுறையை குறிக்கிறது. அதாவது,


* என்ன தொழில் செய்யப்போகிறோம்.
* எப்படியான வழிமுறைகளை கையாளப் போகிறோம்.
* சூழ்நிலைக் காராணிகள் மற்றும் தேவையான மூலப்பொருள்களை எவ்வாறு பெறுவது.
* பொருளுக்கான சந்தையின் நிலை.
* மூலதனத்திற்கான வழிமுறைகள் பற்றிய அனுகுமுறை.
* வேலையாட்களின் ஒத்துழைப்பினை பெறுதல்.
* நிதிநிலையை சரியாக பராமரித்தல் மற்றும் பெறுக்குவதற்கான புதிய சிந்தணைகளை புகுத்தும் முறை போன்ற சில வறையறைகளை தெளிவாக புரிந்துகொண்டு செயலாற்றினால் போதும். திட்டமிடலில் வல்லுனர் ஆகிவிடலாம்.

* என்ன தொழில் செய்யப்போகிறோம்.
அனுபவம் என்பது நம்மால் மட்டுமல்ல பிறறிடம் இருந்தும் கற்றுக்கொள்ள முடியும். எனவே நாம் என்ன தொழில் செய்யப் போகிறோம் என்பதை திட்டமிடும் முன்பு அந்த தொழில் பற்றிய அறிவுடைய சிலரின் ஆலோசனைகளை கேட்டு தெரிந்து கொள்வது மிகவும் பயனை அளிக்கும். ஏற்கனவே செய்யப்போகும் தொழிலுக்கு உண்டான அனுவத்தை பெற்றிருப்போமாயின் அதில் புதிதாக மாற்றம் செய்யும் திறமையை வளர்த்துக்கொள்வது இன்றைய போட்டி யுகத்தில் வேரூன்ற உதவி செய்யும்.
நாம் செய்யும் தொழில் எத்தகையது..? அதற்கான போதிய தகுதிகள் நம்மிடம் இருக்கிறதா..? அல்லது அதை வளர்த்திக்கொள்ளும் வாய்ப்பு எந்த அளவில் இருக்கிறது...? என்பது போன்ற காரணிகளை தெளிவாக ஆலோசனை செய்யுங்கள். ஏனெனில் தொடங்கிய பின்பு அதற்குன்டான அனுபவத்தை நாம் பெறுவதற்குள் ஏறக்குறைய வாடிக்கையாளௌகளின் நன்மதிப்பை நாம் சில நேரங்களில் இழந்திற கூடும் அபாயம் இருக்கிறது.

எனக்கு தெரிந்த பணக்கார நண்பன் ஒருவன் புதிதாக தொழில் தொடங்க எண்ணி அனுபவம் + அறிவு இதனை பற்றி சிந்திக்காமல் ஒரு கம்ப்யூட்டர் சென்டரை தொடங்கி நடத்தினான். அவன் ஆர்ட்ஸ் குரூப் படித்தவன் என்பதால் கம்ப்யூட்டர் பற்றிய போதிய அறிவு பெற்றிருக்கவில்லை. இருந்தாலும் ஆட்களை வேலைக்கு வைத்து நடத்தி விடலாம் என்ற நினைப்பின் காரணமாகவே அவன் அதை தொடங்கினான். சில வாரங்கள் மட்டுமே அவனால் செய்யமுடிந்தது, இப்போது திரும்ப அவன் தனது தந்தையுடன் கம்பெனியினை கவனித்தி வருகிறான். காரணம் வாடிக்கையாளர்களின் தேவை என்ன என்பதை முழுமையாக அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை. வேலைக்கு இருக்கும் ஆட்கள் சம்பளத்தை பொருத்தே நடந்துகொள்வார்கள். அவர்களிடம் எத்தகைய வேலையினை பெறுவது என்பதில் நாம் தானே தீர்மானிக்க வேண்டும்..?

No comments:

Post a Comment