அட!! இது நானே தானா..? பகுதி -1

  • நீங்கள் ஒரு சிறந்த பெற்றோரா..?
    ஒவ்வொரு பெற்றோர்களும் தங்களது குழந்தைகளை சமுதாயத்தில் சிறந்த நிலைகளில் வரவேண்டும் என்ற எண்ணத்துடனே வளர்க்கின்றனர். இருப்பினும், பெற்றோர்கள் தாங்கள் வளர்ந்த சூழ்நிலை மற்றும் அவர்களின் தனிப்பட்ட அனுபவங்களை உள்ளடக்கிய வழிமுறைகளையே பெரும்பாலும் தங்களது குழந்தைகளை வளர்க்கும் முறையிலும் தொடர்கின்றனர்.  அப்படிப்பட்ட தருணங்களில் சிலர் கண்டிப்பானவர்களாகவும், சிலர் அப்பாவிகளாகவும், சிலர் பேராசைக்காரர்களாகவும் தங்களது குழந்தைகளுக்கு தெரிகின்றனர்

ஒரு நல்ல பெற்றோர் ஒரு நல்ல வழிகாட்டியாக இருக்க வேண்டும். உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் ஒரு சிறந்த பெற்றோரா..?

இதோ உங்களை நீங்களே சோதித்துக்கொள்ளுங்கள்.



கேள்வி 1.
        உங்கள் பிள்ளைகளுக்கு குறைந்த பட்சம் 10 வரையிலான கல்வியை கொடுத்திருக்கிறீர்களா..?
 ஆமாம்

        பிள்ளைகளுக்கு பிடித்த உணவு வகைகளை பற்றி அறிந்து வைத்திருக்கின்றீகளா.?
 ஆமாம்

        உங்கள் பிள்ளைகளின் உணவில் வாரத்தில் ஒரு முறையாவது கீரைகள், பழங்கள் அல்லது சிறுதானியங்கள் சேர்க்கப்படுகின்றனவா ?
 ஆமாம்

        பாஸ்ட் புட் உணவினை நீங்கள் பரிந்துரைக்க மறுத்துள்ளீர்களா..?
 ஆமாம்

        அவர்களின் மதிய உணவில் சிறப்பு விருந்து செய்திருக்கிறீர்களா..?
 ஆமாம்

        திண்பன்டங்களை அவர்களே மற்றவர்களுக்கும் பங்கிட்டு கொடுக்கும்படி பழக்கப் படுத்தியிருக்கிறீர்களா..?
 ஆமாம்

        வீட்டில் விருந்தினர்கள் இருக்கும் சமயத்தில் குழந்தைகளையும் உடன் அமர்த்தி அறிமுகப்படுத்திவீர்களா.?
 ஆமாம்

        உங்கள் குழந்தைகள் புதியவர்கள் முன்னிலையில் சகஜமாக பழகுகின்றனரா..?
 ஆமாம்

        உங்கள் குழந்தைகள் அவர்களின் நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வர அனுமதித்தது உண்டா.?
 ஆமாம்

        அதேபோல், நண்பர்களின் இல்லங்களுக்கு தனியே செல்ல விடுவீர்களா.?
 ஆமாம்

        உங்கள் குழந்தைகளின் வகுப்பாசிரியர், அவர்களின் நெருங்கிய நண்பர்களின் பெற்றோர்களுடைய தொலைப்பேசி எண்கள் உங்களிடம் இருக்கின்றதா..?
 ஆமாம்


        குழந்தைகள் அவர்களுக்கு பிடித்த ஆடைகளை தேர்வு செய்ய அனுமதிப்பீர்களா..?
 ஆமாம்

        இரு மாதங்களுக்கு ஒரு முறையாவது புதிய துணி வாங்கி தருவீர்களா.?
 ஆமாம்

        பள்ளி சீருடைகள் மற்றும் பாடபுத்தகங்கள் சுத்தமாக இருக்கிறதா என்று அடிக்கடி சோதனை செய்வீர்களா.?
 ஆமாம்


        அவர்களின் புத்தகப் பையில் என்ன என்ன இருக்கிறது என்பதை அறிவீர்களா.?
 ஆமாம்

        குறைந்த பட்சம் 10 வயது வரையிலாவது அவர்களது பிறந்த தினத்தன்று பரிசுகள் ஏதும் வழங்கியது உண்டா.?
 ஆமாம்


        அவர்களின் வகுப்பு ஆசிரியரை மாதம் ஒரு முறை தொடர்புகொண்டு விவரங்களை கேட்பீர்களா.?
 ஆமாம்

        பள்ளி / பரிச்சை / பேருந்து மற்றும் இதர கட்டணங்களை குறித்து வைத்து சரியான தேதியில் செலுத்திவிடுவீர்களா.?
 ஆமாம்

        .தேர்வு நேரங்களில் விளையாட அனுமதிப்பீர்களா..?
 ஆமாம்

      ஆவர்களின் மதிப்பெண் விழுக்காடு விபரங்களை தெரிந்து வைத்திருக்கிறீர்களா .?
 ஆமாம்

        குழந்தைகளின் படிப்பு தவிர அவர்களுக்கு வேறு சிறப்பு பயிற்சி வகுப்பிற்கு அனுப்புவீர்களா.?
 ஆமாம்

        அவர்களின் மேல் படிப்பிற்காக அல்லது அவர்களது உபயோகத்திற்கென்றே சிறு தொகையையேனும் சேமிக்கின்றீர்களா.?
 ஆமாம்

      உங்கள் குழந்தை, பள்ளியில் ஆண்டுவிழா மற்றும் இதர விழாக்களில் மேடை நிகழ்ச்சியில் பங்கேற்பு / பரிசுகள் வாங்கியது உண்டா.?
 ஆமாம்

        இதர கதை புத்தகங்கள் / விரும்பிய தொலைக்காட்சி நிகழ்சி / வீட்டிற்கு அருகில் உள்ள குழந்தைகளோடு வெளியே விளையாட அனுமதிப்பீர்களா.?
 ஆமாம்

        குழந்தைகள், வீட்டில் பூந்தொட்டி / மீன் தொட்டி / செல்ல பிராணிகளை வளர்க்க அனுமதிப்பீர்களா.?
 ஆமாம்

        வருடம் ஒரு முறை கோடை சுற்றுலா குழந்தைகளோடு செல்வீர்களா.?
 ஆமாம்

        அவர்கள் விரும்பிய பொருளை அவர்களே சேமித்து வாங்க கொள்ள வலியுறுத்துவீர்களா.?
 ஆமாம்

        தினமும் அல்லது இரு நாட்களுக்கு ஒரு முறையாவது அவர்களுடன் கலந்துரையாடுகிறீர்களா.?
 ஆமாம்

        கோவில்கள் மற்றும் இறை வழிபாடுகளில் நம்பிக்கையுடன் ஈடுபடுத்துகிறீர்களா.?
 ஆமாம்

        தாத்தா, பாட்டி மற்றும் பெரியவர்களின் அன்பும், ஆலோசனைகளும் உங்கள் குழந்தைக்கு கிடைக்க செய்கிறீர்களா.?
 ஆமாம்


      இப்படியாக இன்னும் ஆயிரம் ஆயிரம் கேள்விகளை உங்களுக்குள்ளாகவே கேட்டுக்கொள்ள முடியும். மேற்கண்ட கேள்விகளில் குறைந்த பட்சம் 10 கேள்விகளுக்காவது உங்களது பதில் "ஆமாம்" என்று இருந்தால் நிச்சயம் நீங்கள் ஒரு சிறந்த நல்ல பெற்றோராக இருப்பீர்கள். உங்களுக்கு நீங்களே ஒரு ":சபாஸ" சொல்லிக்கொள்ளுங்கள். 

இந்த கேள்விகளிலேயே உங்கள் செல்ல குழந்தைகளின் சிறந்த எதிர்காலத்திர்கான உங்கள் வழிகாட்டும் திறன் வெளிப்பட்டிருக்கும். மேலும் இந்த தொடரில் இதனை பற்றி விரிவாக சொல்லி இருக்கிறேன்.

தொடர்ந்து வாசியுங்கள் :-

தட்டப்படாத கதவுகளே அதிர்ஷ்டத்தை அடைத்து வைத்திருக்கின்றன..!

மேலும் வாசிக்கும் முன் ஒரு கப் தேனீருக்கு ஆர்டர் செய்திடுங்கள்....




2 comments:

  1. பள்ளியில் கேள்வி கேட்கும் போது பதில் தெரியாமல் ஓடி வந்த பெற்றோர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் அவர்களுக்கு புரிந்த சுவாஸ்ரசியமான் விசங்களில் இருந்து கருது சொன்னால் உடனே வந்து கருத்துகளை பதிவு செய்வார்கள் நீங்கள் ஆசிரியரை போல கேள்வி கேட்டால் இந்த பக்கம் எப்படி வருவார்கள் நண்பா ............ஆனாலு இன்றைய தலைமுறைக்கு தேவையான சோதிக்கும் கேள்விகளை அடங்கிய நூல் பற்றிய உங்கள் பதிவு அருமை தொடருங்கள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. பகுத்தறிவு பிறந்ததெல்லாம் ,,,
      கேள்வியை கேட்டதினாலே...

      விரைவில் தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்,,,

      Delete