இன்னும் கத்துக்கனும் கண்ணா...

ஹெ அந்த வீட்ட நீ பார்துக்கோ, நான் இங்கே பார்துக்கறேன்.
சரிக்கா..
டேய் அந்த அக்கா உள்ளே போரறாங் சீக்கரமா போ...
---
--

அக்கா... அக்கா...
யாருப்பா என்ன வேணும்...
அக்க பாத்திரம் வெளக்கர பவுடரு வேணுங்களா... மூனு பாக்கெட்டு பத்து ரூபா தான்..
இல்லப்ப.. அதெல்லாம் வேண்டாம்... எற்கனவே இருக்கு..
இல்லக்க இது நல்லா இருக்கும் வேணும்ன்னா சேம்பல் பாருங்கக்கா,,
(விரு விருன்னு பக்கத்துல இருந்த பாத்திரத்தை எடுத்து தேய்த்து காட்டுகிறான் சாரி காட்டுகிறார்)
---
பாத்திங்களா... பளிச்சுனு அகிருச்சு...
--
பரவாலப்பா எங்கிட்டே இருக்கிறது தீர்ந்தப்பரமா வாங்கிக்கறேன்.. இப்ப வேணாம்..
--
பத்து ரூபாதாங்கக்கா வாங்கி வைச்சுக்கங்க அது தீர்ந்தப்பரமா இதுல வெளக்குங்க.. வாங்கிக்கங்க..
--
--

இன்னைக்கு எதாவது உருப்படியானா பதிவை எழுதியே ஆகனுமே என்ன எழுதரதுன்னு யோசிச்சுட்டே பல்ல விளக்கிட்டு இருக்கும் போது என் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் இளம் தொழிலதிர்கள் மூவர் தங்கள் விற்பனையை நடத்திக்கொந்திருந்த காட்சிகளே மேற்கண்டவைகள் ஆகும்..

அது சரி மேட்டருக்கு போலாம் இன்னும் இருக்கு..

ஹே கண்ணுங்களா இங்க வாங்கா என்ன அது .. ( இது நானாக்கும்)
அண்ணா வெளக்கர பவுடருங்கண்ணா..
ஓ.. சரி காலைல இது வைச்சுட்டு சுத்தரீங்களே இன்னைக்கு பள்ளிக்கூடம் போகலையா,,,
எக்சாம் நடக்குது மதியம் போகனும்ண்ணா..
அண்ணா நீங்களும் வாங்கிக்கங்கண்ணா.. மூனு பாக்கெட் பத்துரூபாய் தாங்கண்ணா..
சரி உள்ள போ அம்மா இருப்பாங்க கேளு....
( இன்னும் கல்யாணம் ஆகளைங்க அதனால அம்மா, அம்மா தானுங்கோ)
சரிங்கண்ணா..

--
அக்கா வெளக்கர பொடி வேணுங்களா..
இல்லப்ப வேணாம் இருக்குப்பா.. ( இது என் அம்மா)
மறுபடியும் அவன் சாரி அவரு பழைய பாட்ட பாடி அம்மாவிடம் டெமோ காட்டிணாண்.. அப்போது நான் கண்களால் வாங்கிக்கங்க பாவமா இருக்கு என்பது போல பார்த்தேன்.. அதை உணர்ந்தவராய் அம்மா அவரிடம் பேச்சு கொடுத்தார்கள்..

ஏன்டா தம்பி நாலு பாக்கெட்டு கொடுக்க வேண்டியதுதான்னே.. கடையில இருக்குற பவுடரு லைட்ட தொட்டாலே அழுக்கு போயுடும் ஆனா இத அலுத்தியல்ல தேய்க்குறே...
இல்லக்கா.. அவுக ரொம்பா தயாரிக்குராங்கள்ள அதனால தான் அப்படி தராங்கா.. நாங்களும் நல்லத தான் வைச்சிருக்குரோம்.. ஆனா கட்டுபடியாகாதுக்கா.. மூனு தான் தரமுடியும்..

அதெல்லாம் இல்ல நாலு பாக்கெட்டு தா.. இல்லைன்னா வேணாம்..
இல்லக்க அவ்லோ எல்லாம் வராது..
என்னடா நீ புது பவுடரு.. கொஞ்சமாவது அனுசரிடா..
வேணும்ன்னா.. இந்த சேம்ப்பல்ல கொஞ்சம் எடுத்துக்கங்க...


பேரம் பேசாம வாங்கும்மா.. பாவமா இருக்கு..

சரி குடுடா.. எவ்வளவு..
பத்து ரூபா..
இந்த,,,
தேங்ஷ்க்கா...


ஹே கையில என்னடா காயம்.. இரு மருந்து கொடுக்கறேன் போட்டுட்டு போ...


---
---

பையன மருந்து போட்டுட்டு அனுப்பியது,

ஏம்மா அவங்கிட்டே போய் பேரம் பேசுர... பத்து ரூபா தானே.. கொடுத்திட்டு அனுப்ப் வேண்டியதானே... என்றேன்.

அதற்கு..


அவனுக்கு பணத்த உடனே கொடுத்துட்டா அதனோட வேல்யூவ அவன் உணர மாட்டான்.. இந்த வயசுல வீடு வீடா சேல்ஷ் பன்றான்.. மத்தவங்க கிட்டே அவன் பேசரதுக்கு கொஞ்சம் இதுவும் உதவி செய்யும்.. பணம் கொடுக்கிறத காட்டிலும் அவனோட வளர்ச்சிக்கு இது போன்ற சாமார்த்தியமான பேச்சு திறமைதான் முக்கியம். அதனால தான்டா நான் அவங்கிட்டே பேச்சு கொடுத்தேன்...

புரிஞ்சுதா... என்றார்....


ஹும் இப்பதான் புரிஞ்சுதுன்னு தலையாட்டுனேன்...


அய்யய்யோ டைம் ஆயிடுச்சே...

இன்னைக்கு எதை பத்தி பதிவு எழுதலாம்னு யோசிச்சுட்டே இருக்குறேன்.. ஒன்னுமே கிடைக்கல,,,,,,











No comments:

Post a Comment