அட!! இது நானே தானா..? பகுதி -1

  • நீங்கள் ஒரு சிறந்த பெற்றோரா..?
    ஒவ்வொரு பெற்றோர்களும் தங்களது குழந்தைகளை சமுதாயத்தில் சிறந்த நிலைகளில் வரவேண்டும் என்ற எண்ணத்துடனே வளர்க்கின்றனர். இருப்பினும், பெற்றோர்கள் தாங்கள் வளர்ந்த சூழ்நிலை மற்றும் அவர்களின் தனிப்பட்ட அனுபவங்களை உள்ளடக்கிய வழிமுறைகளையே பெரும்பாலும் தங்களது குழந்தைகளை வளர்க்கும் முறையிலும் தொடர்கின்றனர்.  அப்படிப்பட்ட தருணங்களில் சிலர் கண்டிப்பானவர்களாகவும், சிலர் அப்பாவிகளாகவும், சிலர் பேராசைக்காரர்களாகவும் தங்களது குழந்தைகளுக்கு தெரிகின்றனர்

ஒரு நல்ல பெற்றோர் ஒரு நல்ல வழிகாட்டியாக இருக்க வேண்டும். உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் ஒரு சிறந்த பெற்றோரா..?

இதோ உங்களை நீங்களே சோதித்துக்கொள்ளுங்கள்.



கேள்வி 1.
        உங்கள் பிள்ளைகளுக்கு குறைந்த பட்சம் 10 வரையிலான கல்வியை கொடுத்திருக்கிறீர்களா..?
 ஆமாம்

        பிள்ளைகளுக்கு பிடித்த உணவு வகைகளை பற்றி அறிந்து வைத்திருக்கின்றீகளா.?
 ஆமாம்

        உங்கள் பிள்ளைகளின் உணவில் வாரத்தில் ஒரு முறையாவது கீரைகள், பழங்கள் அல்லது சிறுதானியங்கள் சேர்க்கப்படுகின்றனவா ?
 ஆமாம்

        பாஸ்ட் புட் உணவினை நீங்கள் பரிந்துரைக்க மறுத்துள்ளீர்களா..?
 ஆமாம்

        அவர்களின் மதிய உணவில் சிறப்பு விருந்து செய்திருக்கிறீர்களா..?
 ஆமாம்

        திண்பன்டங்களை அவர்களே மற்றவர்களுக்கும் பங்கிட்டு கொடுக்கும்படி பழக்கப் படுத்தியிருக்கிறீர்களா..?
 ஆமாம்

        வீட்டில் விருந்தினர்கள் இருக்கும் சமயத்தில் குழந்தைகளையும் உடன் அமர்த்தி அறிமுகப்படுத்திவீர்களா.?
 ஆமாம்

        உங்கள் குழந்தைகள் புதியவர்கள் முன்னிலையில் சகஜமாக பழகுகின்றனரா..?
 ஆமாம்

        உங்கள் குழந்தைகள் அவர்களின் நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வர அனுமதித்தது உண்டா.?
 ஆமாம்

        அதேபோல், நண்பர்களின் இல்லங்களுக்கு தனியே செல்ல விடுவீர்களா.?
 ஆமாம்

        உங்கள் குழந்தைகளின் வகுப்பாசிரியர், அவர்களின் நெருங்கிய நண்பர்களின் பெற்றோர்களுடைய தொலைப்பேசி எண்கள் உங்களிடம் இருக்கின்றதா..?
 ஆமாம்


        குழந்தைகள் அவர்களுக்கு பிடித்த ஆடைகளை தேர்வு செய்ய அனுமதிப்பீர்களா..?
 ஆமாம்

        இரு மாதங்களுக்கு ஒரு முறையாவது புதிய துணி வாங்கி தருவீர்களா.?
 ஆமாம்

        பள்ளி சீருடைகள் மற்றும் பாடபுத்தகங்கள் சுத்தமாக இருக்கிறதா என்று அடிக்கடி சோதனை செய்வீர்களா.?
 ஆமாம்


        அவர்களின் புத்தகப் பையில் என்ன என்ன இருக்கிறது என்பதை அறிவீர்களா.?
 ஆமாம்

        குறைந்த பட்சம் 10 வயது வரையிலாவது அவர்களது பிறந்த தினத்தன்று பரிசுகள் ஏதும் வழங்கியது உண்டா.?
 ஆமாம்


        அவர்களின் வகுப்பு ஆசிரியரை மாதம் ஒரு முறை தொடர்புகொண்டு விவரங்களை கேட்பீர்களா.?
 ஆமாம்

        பள்ளி / பரிச்சை / பேருந்து மற்றும் இதர கட்டணங்களை குறித்து வைத்து சரியான தேதியில் செலுத்திவிடுவீர்களா.?
 ஆமாம்

        .தேர்வு நேரங்களில் விளையாட அனுமதிப்பீர்களா..?
 ஆமாம்

      ஆவர்களின் மதிப்பெண் விழுக்காடு விபரங்களை தெரிந்து வைத்திருக்கிறீர்களா .?
 ஆமாம்

        குழந்தைகளின் படிப்பு தவிர அவர்களுக்கு வேறு சிறப்பு பயிற்சி வகுப்பிற்கு அனுப்புவீர்களா.?
 ஆமாம்

        அவர்களின் மேல் படிப்பிற்காக அல்லது அவர்களது உபயோகத்திற்கென்றே சிறு தொகையையேனும் சேமிக்கின்றீர்களா.?
 ஆமாம்

      உங்கள் குழந்தை, பள்ளியில் ஆண்டுவிழா மற்றும் இதர விழாக்களில் மேடை நிகழ்ச்சியில் பங்கேற்பு / பரிசுகள் வாங்கியது உண்டா.?
 ஆமாம்

        இதர கதை புத்தகங்கள் / விரும்பிய தொலைக்காட்சி நிகழ்சி / வீட்டிற்கு அருகில் உள்ள குழந்தைகளோடு வெளியே விளையாட அனுமதிப்பீர்களா.?
 ஆமாம்

        குழந்தைகள், வீட்டில் பூந்தொட்டி / மீன் தொட்டி / செல்ல பிராணிகளை வளர்க்க அனுமதிப்பீர்களா.?
 ஆமாம்

        வருடம் ஒரு முறை கோடை சுற்றுலா குழந்தைகளோடு செல்வீர்களா.?
 ஆமாம்

        அவர்கள் விரும்பிய பொருளை அவர்களே சேமித்து வாங்க கொள்ள வலியுறுத்துவீர்களா.?
 ஆமாம்

        தினமும் அல்லது இரு நாட்களுக்கு ஒரு முறையாவது அவர்களுடன் கலந்துரையாடுகிறீர்களா.?
 ஆமாம்

        கோவில்கள் மற்றும் இறை வழிபாடுகளில் நம்பிக்கையுடன் ஈடுபடுத்துகிறீர்களா.?
 ஆமாம்

        தாத்தா, பாட்டி மற்றும் பெரியவர்களின் அன்பும், ஆலோசனைகளும் உங்கள் குழந்தைக்கு கிடைக்க செய்கிறீர்களா.?
 ஆமாம்


      இப்படியாக இன்னும் ஆயிரம் ஆயிரம் கேள்விகளை உங்களுக்குள்ளாகவே கேட்டுக்கொள்ள முடியும். மேற்கண்ட கேள்விகளில் குறைந்த பட்சம் 10 கேள்விகளுக்காவது உங்களது பதில் "ஆமாம்" என்று இருந்தால் நிச்சயம் நீங்கள் ஒரு சிறந்த நல்ல பெற்றோராக இருப்பீர்கள். உங்களுக்கு நீங்களே ஒரு ":சபாஸ" சொல்லிக்கொள்ளுங்கள். 

இந்த கேள்விகளிலேயே உங்கள் செல்ல குழந்தைகளின் சிறந்த எதிர்காலத்திர்கான உங்கள் வழிகாட்டும் திறன் வெளிப்பட்டிருக்கும். மேலும் இந்த தொடரில் இதனை பற்றி விரிவாக சொல்லி இருக்கிறேன்.

தொடர்ந்து வாசியுங்கள் :-

தட்டப்படாத கதவுகளே அதிர்ஷ்டத்தை அடைத்து வைத்திருக்கின்றன..!

மேலும் வாசிக்கும் முன் ஒரு கப் தேனீருக்கு ஆர்டர் செய்திடுங்கள்....




Read more ...

அட!! இது நானே தானா..? முன்னுரை

பெற்றோர்கள் மற்றும் வளர் இளம்பருவத்தினருக்கான பொக்கிஷம்.

     தேடல்கள் இல்லாத உயிர்கள் இவ்வுலகில் இல்லை.. அப்படி தேடி தேடி இன்னும் மன நிறைவு கொள்ளாமல், மேலும் தேடுவதையே குறிக்கோளாய் கொண்ட உயிர்கள் மனித இனம் மட்டுமே ஆகும். இப்படிப் பட்ட தேடல்களின் விளைவால் நாம் பெற்றது என்ன? மற்றும் நாம் இழந்தது என்ன என்பதை தன்னுணர்வின்பால் உணர்ந்தவர்களின் அனுபவ வார்தைகளால் இந்த பகுதியானது தொடங்கப்படுகிறது. 

    ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு ஒவ்வொரு குடும்பத்தின் தனிப்பட்ட வளர்ச்சி என்பது மிக முக்கியமானதாகும். இன்றைய சூழ்நிலைகளில் தனிக்குடும்பங்களாக வாழும் பல கோடி குடும்பங்களில் நிகழும் பெற்றோர், பிள்ளைகளின் உறவுச் சங்கிலிக்கிடையே ஏற்படும் விரிசல்களுக்கான காரணத்தையும் அதற்கான தீர்வுகளையும் சாமானியர்களுக்கும் புரியும் வண்ணம் இந்த தொடர் பதிவு பகுதியானது அமையும்.

   மனஅழுத்தம், மனசோர்வு என்பது எதனால் ஏற்படுகிறது என்பதையும், அதனை அழிக்கும் அருமையான உற்சாக மருந்து என்ன என்பதையும் இத்தொடரில் விவரிக்கப்படும்.

  வளர் இளம் பருவத்தினர் சந்திக்கும் சிக்கல்களையும், தீர்வுகளையும் எடுத்துணர்த்தும். மேலும் மாணவர்களுக்கான தேர்வுகால பயத்தை போக்கவும், ஞாபக மறதி போன்ற சிக்கல்களில் இருந்து விடுபடவும் அறிய வாய்ப்பை தெரியப்படுத்தவும் இந்த தொடர் உங்களுக்கு பயன்படும்.


இந்த தொடர் பதிவின் அனைத்து பகுதிகளையும் முழுமையாக படித்த ஓவ்வொருவரும் தங்களது வாழ்வில் தவறவிட்ட தருணங்களை திரும்பி கொன்டுவர ஆசைப்டுவார்கள், மேலும் கிடைத்திருக்கும் நாட்களில் தங்களை தாங்களே புரிந்து கொண்டு செயல்படுவார்கள். இப்படி ஓவ்வொருவரும் தங்களுக்குள்ளாகவே அட!! இது நானே தானா..? என்று ஆச்சரியப்பட்டு போவார்கள் என உறுதியளிக்கிறேன்.

    மொத்ததில் பிள்ளைகளின் மன இருக்கத்தை பெற்றோரும், பெற்றோர்களின் மன நிலைகளை பிள்ளைகளும் புரிந்துகொண்டு பரஸ்பரம் அன்பு பாராட்டும் ஒரு இன்பமான் குடும்ப சூல்நிலைகளை உருவாக்க இந்த தொடர் பதிவானது பணியாற்றும் என நம்புகிறேன்.

உங்களின் கருத்துக்களையும், ஆதரவினையும் பின்னூட்டம் இடுவதன் மூலமாக இன்னும் சிறப்பாக இந்த தொடர் பதிவினை அமைக்க எனக்குதவும் என எதிர்பார்கிறேன்.


நன்றி!!

உற்சாக கருத்துகளோடு

செள. அருணேஸ்வரன்.
25.05.2012 வெள்ளி

Read more ...

உங்கள் வலைத்தளத்திற்கு வரும் வாருகையாளர்களின் பார்வை விகிதம் குறைந்து விட்டதா..?

வலைப் பதிவில் புதிதாக வந்த புதிதில் நமக்கு தெரிந்த சில விசயங்களை ஆர்வமோடு பகிர்ந்து கொண்டிருப்பொம். தொடங்கிய பொழுதில் வருகையாளர்களை நாம் அதிகமாக்க எழுதும் விதத்தில் ஆர்வம் அதிகமாக காட்டியிருப்போம். நாளடைவில் வருகையாளர் பார்வை விகிதமானது குறைவது போன்று தோன்றும்.  வருகை விகதம் குறைவது தெரிந்ததுமே நமது எழுத்துக்கள் வருகையாளர்களை திருப்தி படுத்த தவறிவிட்டதோ என்று வருத்தம் ஏற்ப்பட்டு நாளடைவில் பதிவு எழுதுவதையே நிறுத்தி விட்டு தனது பயணத்தை முற்றுப்புள்ளி வைத்து சென்றவர்கள் ஏராளம். 

இப்படி ஆரம்பத்தில் பிரபலமாக பேசப்பட்டு, நாளடைவில் பதிவே இல்லாமல் திரும்பியவர்கள் தங்களை முழுமையாக சோதித்துகொள்ளுங்கள்

உங்கள் வலைத் தளத்தில் வருகையாளர்கள் குறையவே மாட்டார்கள் 

தினம் புதிதாக கற்றுக் கொள்ளுங்கள் :

    உங்கள் வலைப் பதிவில் கருத்துக்களை பதிய போதுமான வார்த்தைகள் கிடைப்பதில்லையா..? கவலையைவிடுங்கள். தினம் நீங்கள் ஒரு பதிவை எழுதுகிறீர்களோ இல்லையோ வேறு, பத்து பதிவுகளையாவது முழுமையாக படியுங்கள். கற்றுக்கொள்ளும் ஆர்வம் கண்டிப்பாக வேண்டும். உங்களால் மற்றவர்கள் பதிவை படிக்க முடிந்தால் தான் உங்களது பதிவுகளுக்கான வார்த்தைகளை தேடாமல், தட்டச்சில் கை வைத்த உடனே உங்கள் பதிவிற்கான வார்த்தைகள் உங்கள் கரங்களில் தவழும்.

உங்கள் பதிவில் உள்ள கருத்துக்கள் மற்றவர்களுக்கு படிக்க எளிதாகவும், புரியும்படியும் இருக்க வார்த்தைகளே வாய்ப்பாக அமையும் என்பதை உணருங்கள்.

பார்வையாளர்கள் விருப்பத்தை பூர்த்தி செய்தல் :

       உங்கள் தளத்திற்கு வரும் பார்வையாளர்கள் உங்கள் கருத்தையோ அல்லது எழுதும் தன்மையையோ பிடித்துப்போய் தான் வருவார்கள். அவர்களின் விருப்பம் என்ன என்பதை முழுமையாக புரிந்து கொள்ளுங்கள். 

உதாரனமாக, 
       நீங்கள் ஒரு நல்ல நகைச்சுவையாளராக அடையாளம் காட்டிக்கொள்ளும் பட்சத்தில் உங்கள் தள வருகையாளர்கள் அதை மட்டுமே விரும்பி வருகிறார்காள் என்று உணருங்கள். உங்கள் தள கருத்துக்கள் யாவுமே சிரிப்பை சிதறும் படியே அமைத்துக்கொள்ளுங்கள். யோசனையே வேண்டாம் முழுமையாக நீங்கள் ஒரு பகுதியை நோக்கியே உங்கள் கவனத்தை செலுத்துங்கள், உங்களுக்கு தனிப்பட்ட முறையில் தொழில்நுட்ப பதிவை எழுதும் எண்ணம் இருந்தால் அதற்காக தனியாக வேறு பக்கத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள். இரண்டையும் ஒரே இடத்தில் பதிவதன் மூலமாக பார்வையாளர்கள் மனம் மாறுபட்டு புரிதல் தவறிவிட வாய்ப்புள்ளது.

Read more ...

முற்றிலும் இலவசமாக சொந்த டொமைன் மற்றும் ஹோஸ்டிங் சேவை வேண்டுமா..?

     இணையத்தை பொறுத்த வரையில் நமக்கென்றே ஒரு இணையதளம் வேண்டுமெனில் குறைந்த பட்சம் 5000 ரூபாயாவது செலவு செய்தால் மட்டுமே நமக்கென்றே ஒரு தளத்தை நமக்கு விருப்பமான பெயரில் தொடங்க முடியும்.
பிளாக் அல்லது வேர்ட்பிரஸ் போன்ற நிறுவனங்கள் வலைப்பூ துவங்க உதவினாலும். அவைகளின் சப் டொமைனையே பயன்படுத்த வேண்டி இருக்கும். 

ஆனால் கூகிள் நிறுவனம் தற்போது இந்த குறையை போக்கியுள்ளது.



     கூகிள் நிறுவனம் ஆனது ஹோஸ்ட் கேடர், ஐசிஐசிஐ மற்றும் பெடரேசன் ஆப் மைக்ரோ ஸ்மால் அன் மீடியம் என்டெர்பிரைசஸ் ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து http://www.indiagetonline.in என்ற தளத்தை அறிமுகம் செய்துள்ளது

இந்த வசதியானது இந்தியாவில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. 

   இந்த தளத்தில் இலவசமாக நமக்கென்ற டொமைனை நாம் தேடிப்பெற்று அதை முற்றிலும் இலவசமாகவே ஹோஸ்ட்டும் செய்துகொள்ளலாம்.

   வியாபார நிறுவனங்கள் இந்த சேவையை பயன்படுத்திடவே இலவச இணையத்தள சேவையை இந்த தளம் வழங்குகிறது.

இந்த தளத்தின் சிறப்பம்சங்களாவன :

  • டொமைன் மற்றும் ஹோஸ்டிங் முற்றிலும் இலவசம்
  • ஒரு வருடத்திற்கு இந்த சேவை இலவசம்
  • டொமைன் பெயரிலேயே மின்னஞ்சல் கணக்கையும் உருவாக்கி கொள்ளலாம் (www.yourname@yourdomain.com )
  • ஒரு வருடத்திற்கு பிறகு மேலும் தொடர்ந்து வேண்டுமானால் சந்தாதாரராக இணைந்துகொள்ளலாம்
  • தளத்தை வடிவமைக்க இலவச வடிவமைப்பு சேவையையும் வழங்குகிறது
  • டொமைன் ஆனது முடிவில் .in ல் அமைகிறது (www.yourname.in)
  • இலவச தொலைப்பேசி எண்ணில் நமக்கான வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்புகொள்ளலாம்
  • டொமைன் ரிஜிஸ்டர் செட்ய்தவுடனாகவே நமக்கான கன்ட்ரோல் பேனல் அமைப்பு கிடைத்துவிடும்
  • மிக விரைவாக இணையதளத்தை நிறுவிடலாம்.
    கூகிள் மின்னஞ்சல் கணக்கும் உங்களது பான் கார்டும் இருக்கும் பட்சத்தில் தாராளமாக நீங்கள் இந்த சேவையை பெற முடியும்.

   இந்த சேவையை பயன்படுத்தி தொடங்கிய எனது வலைப்பக்கத்தை காண டொடுக்குங்கள் : 


  உங்களுக்கும் இலவசமாக ஒரு தளத்தை உறுவாக்க வேண்டுமா..? மேற்கண்ட indiagateonline தளத்திற்கு சென்று துவங்குங்கள் உங்களுக்கான இலவச இணையதளத்தை.

வாழ்த்துக்கள்..!




Read more ...

உங்கள் வலைத்தளம் தரமானதா..?

தமிழ் வலைத்தளத்திற்கான ஒரு புதிய அறிமுகம்
உங்கள் தளம் தரமானதா..?
இணையுங்கள் எங்களுடன்..

http://cpedelive.blogspot.com

Read more ...

இணைவதால் வரும் இணையத்தில் வருமானம்

நமது தமிழில் மொழில் முதன் முறையாக ஒரு புதிய முயற்சியாக இணையத்தில் ஒரு புது எழுச்சியை கொண்டு வருவதற்காகவும், வலைப்பதிவாளர்களுக்கும், வாசகர்களுக்கும் வருமானத்தையும் தேடி தரும் விதமாக புதுமையான ஒரு இணைய வலைத்தளமானது தனது முதல் சேவையை தொடங்கியுள்ளது.



இந்த தளத்தில் இலவசமாக உறுப்பினராக இணையும் அனைவருக்குமே ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருப்பதாக தள வடிவமைப்பாளர்கள் கூறுகின்றனர். 

தளத்தின் தோற்றமும், முறைமையும் மிக எளிதாகவும் கவரும்படியும் அமைந்திருப்பதுடன் வருமானத்தையும் ஈட்டித்தரும் என்பதை உணரமுடிகிறது.






இந்த தளமானது எப்படி இயங்குகிறது என்பதை காத்திருந்து தான் தெரிந்துகொள்ள முடியும்.  ஏனென்றால் தளத்தின் வருமானத்திற்கான முழு செயல்பாடும் நவம்பர் மாதம் முதல் நாளிலிருந்தே தொடங்க இருக்கிறது.

இப்போதே தங்கள் தளத்திற்காக பயனாளர்களை சேர்க்க தொடங்கிவிட்டது.

உறுப்பினராவதற்கு அப்படி ஒன்றும் சிறமப் பட தேவை இல்லை.

என்னங்க சேர்ந்துதான் பார்ப்போமே...

தள முகவரி

http://cpedelive.blogspot.com


( கொசுறு தகவல் : நிச்சயமாக இந்த தளத்தில் வருமான வாய்ப்பு பற்றியும் தெரிந்து கொள்ளலாம், சிறந்த பொழுதுபோக்கு தளமாகவும் பயன்படுத்தலாம். காரணம் இந்த தளத்தின் தொழி வாய்ப்பு பிரிவில் எனக்கும் ஒரு சிறிய பங்கு உள்ளது )

நவம்பர் வரை காத்திருக்க வேண்டியதில்லை. இன்றே உறுப்பினராக இணைந்துவிடுவோம்.





Read more ...

வலை போட்டு பணம் பிடிக்கலாம்..

    வலைப்பதிவுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருவதை கொண்டே வலைப்பதிவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதை உணரமுடிகிறது. எதற்காக இவர்கள் வேலை மெனக்கெட்டு எழுத வேண்டி இருக்கிறது..? என்று பல வித சிந்தனைகள் இருந்தாலும் கூட, சுவாரசியம் கொஞ்சும் வார்த்தைகளின் மூலமாக நம்மை கட்டி இழுக்கும் வல்லமை கொண்ட பதிவர்கள் பலர் இருக்கின்றனர் என்பதே உண்மை. 
   
  ஆரம்பத்தில் வலைப் பதிவின்பால் ஆர்வம் கொண்டு ஏதேனும் கிறுக்க தொடங்கி பின் கொஞ்சம் கொஞ்சமாக தனது எழுத்தின் தரத்தினை கூட்டி நாங்களும் நல்ல பதிவர்கள் தான் என்பதை பலரும் நிருபித்து காட்டி வருகின்றனர். வலைப் பதிவுகளின் தலைப்புகளை வைத்தே பதிவர்களின் எண்ணத்தையும் தரத்தினையும் அறிய முடிகிறதல்லவா..?






    வலைப்பதிவை தொடங்கிய உடன் முதன் முதலாக ஒரு பதிவை போட்டிருப்போம்.. அதற்கு பார்வையாளர்கள் வர வைக்க என்ன செய்வோம்..? நமக்கு பொதுவாக தெரிந்த மட்டும் ஆர்க்குட், பேஸ்புக் நண்பர்கள் மூலமாக கொஞ்சமாக பார்வையாளர்களை திரட்டுவோம்..  ஒரு நாளைக்கு 4 முதல் 5 ஹிட் வருவதற்கே அரும்பாடு பட வேண்டியிருக்கிறது.. எப்படித்தான் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை நமது வலை பளத்திற்கு வர வைப்பது என்பதனை நினைக்கும் போதே...., அட.., ஒழுக்கம பொழப்ப பார்ப்போம்.. என்று ஓரம் கட்ட பார்க்கின்றோம் தானே..?  வேண்டும் என்றால் நமது திருப்திக்காக மேலும் ஏதாவது ஒரு சில பதிவுகளை போட்டிருப்போம்.. பிறகு நாமே நமது பதிவினை மறந்து போய் சொந்த வேலையை பார்க்க மூட்டை முடிச்சை கட்டியிருப்போம். அப்படி இருக்கும் போது பிரபல பதிவர்கள் என்று பெருமையடித்து கொண்டு எப்படிப்பா இவங்க பொழப்ப ஓட்டுறாங்க என்று பல முறை மனதுக்குள் கேள்விகள் எழும் தானே..? ஆவர்களுக்கெல்லாம் இப்படி பதி போடுரது தான் முழு நேர வேலையா..? அப்படி அவர்கள் பதிவு போடுறதால யாருக்கு என்ன லாபம்..? ஏன் அவர்களுக்கே கூட என்ன லாபம் இருக்கிறது..?

( அதற்கு முன்னால் /// ; சண்டைக்கு வர வேண்டும் என்று யோசனை செய்து கொண்டிருக்கும், பொது நல பதிவர்களினை சமாளிக்கனுமே..!!? )


பதிவர்களில் ஒரு சில வகைகள் இருக்குங்க

  • இலக்கியம் / கவிதை பதிவுகள்
  • சினிமா / அரசியல் பதிவுகள்
  • கணிணி / தொழில்நுட்ப பதிவுகள்
  • நகைச்சுவை பதிவுகள்
  • பொது / படைப்புகள் தொடர்பான பதிவுகள்
  • வம்பு / மொக்கை பதிவுகள்
போன்ற பல வகைகளில் பதிவர்கள் தங்கள் கருத்துகளை பகிர்கின்றனர்.

     சரி இப்படி வித, விதமா பதிவுகளை எழுதுறாங்களே இவங்களோட நோக்கம் தான் என்ன..?

 எதுக்காக இவர்கள் தங்களுடைய நேரத்தினை இப்படி கழிக்கின்றனர்..?

மனிதனுக்கு பணம் அதிகமா கிடைச்சாலும் பிரச்சனை தான்,, கிடைக்காமயே இருந்தாலும் பிரச்சனை தான்.. எல்லோருமே எதையாவது தேடி ஓடிக்கொண்டே இருக்கிறார்கள் என்பதே உண்மை..


  •   கவிதை / இலக்கிய பதிவுகளினை பொதுவாக அத்தைய துரைகளின் ஆர்வம் இருப்பவர்கள் பதிகின்றனர். அவர்களின் எண்ணம் தமது ஆழ் மனதினில் கேட்டுக்கொண்டிருக்கும் கேள்விகளினை தட்டி எழுப்பி அதை மற்றவர்களும் தெரிவித்து அவர்கள் தரும் ஆறுதல்கள் / பாராட்டுகள் மூலமாக தங்களின் மனதினை அமைதி கொள்ள செய்து விடுவார்கள்
  • சினிமா / அரசியல் பதிவர்கள் பெரும்பாலும் வேலை மெனக்கெட்டு தான் செய்யும் வேலைகளை மற்றவர்களிடம் பதியும் வேலையினை செய்ய இருப்பார்கள். இவர்களின் நோக்கமானது எல்லோருக்கும் தெரிந்த ஒரு விசயத்தினை தனது அறிவின்பால் எடுத்து கூறுவது அவர்களின் அறிவின் திறனை வெளிப்படுத்தவற்கான வடிகாளாக இருக்கும். ஒரு சிலர் வேண்டுமென்றே தனக்கு பிடித்த, பிடிக்காத கருத்துகளை பரப்புவதற்காக பயன்படுத்தி கொள்கின்றனர். ஒரு சிலரே சரியான தகவல்களை பதிந்து "சபாஸ்." வாங்குகின்றனர்.
  • கணிணி / தொழில்நுட்ப பதிவர்களாவர், தாங்கள் ஏற்கனவே பணியாற்றிய அல்லது தொடர்பான தகவல்களை தெரிந்து வைத்து அதனை மற்றவர்களுக்கும் பயனுள்ள வகையில் தொகுத்து வழங்கி அவர்களுக்கென்றே ஒரு புது உலகத்தும் புது மனிதர்களினையும் தன் பால் தக்கவைத்துகொண்டிருப்பார்கள். இவர்களின் நோக்கம்,, மாறாதா தேடலினை மற்றவர்க்கும் தெரிவிப்பதே ஆகும்.
  • நகைச்சுவை / வம்பு / மொக்கை பதிவுகள் அனைத்துமே தங்களது சிறந்த திறமையை வெளிப்படுத்துகின்றனர். இவர்களின் எண்ணிக்கையே பெரும்பாலும் இருக்கின்றது.. இவர்களுக்கென்றே பாரட்ட ஒரு கூட்டமும், திட்டுவதர்கென்றே ஒரு கூட்டமும் இருக்கிறது.. இவர்கள் நகைச்சுவை என்ற பெயரில் அழவைக்கவும் முடியும்,, அழகாக்கவும் முடியும்,, இவர்கள் யாவரும் தனிக்காட்டு ராஜாக்கள் ஆவர். ( ராணிகளும் இருக்கிறார்களப்பா..)
  • பொது / ஆக்கங்கள் தொடர்பான பதிவர்கள் தங்களது சிந்தனைகளினை  பகிர்கின்றனர். இவர்களின் கருத்துகள் சமூகத்தின் மேல் கோபமாகவோ அல்லது ஏக்கமாகவோ இருக்க கூடும். 

     இவ்வாறாக ஏதேனும் ஒரு கருத்தின் கீழாக பதிவர்களாக வலம் வரும் அனைவருமே தங்களின் பதிவுகள் மூலமாக ஏதேனும் வருமானம் வரக்கூடும் என்றிருந்தால் அதனினை புறக்கனிக்க மாட்டார்கள் என்றே எண்ணுகின்றேன். 
ஒரு சிலர் மட்டுமே தங்களின் கருத்துக்கள் மற்றவரையும் சென்றடைந்தால் போதுமென கருதுபவர்களாக இருக்கின்றனர்.

சரி, வலைப்பதிவுகள் மூலமாக கண்டிப்பாக வருமானம் ஈட்ட முடியுமா..?

நிச்சயமாக சம்பாதிக்க முடியும்.

உங்களது உழைப்புக்கு ஏற்றவாறு குறுகிய அல்லது பெரிய அளவில் வருமானத்தை கண்டிப்பாக பெறலாம். 

எவ்வாறாக பணத்தை சம்பாதிப்பது என்பதனை விரிவான பக்கங்களாக தொடர்ந்து தரவே இனி வரும் பதிவுகள் காத்திருக்கின்றன.








( வலைப்பதிவில் தற்சமயம் வருமானம் ஈட்டிக்கொண்டிருக்கும் பதிவர்கள் தங்களது கருத்துகளையோ அல்லது லிங்க்கையோ கமென்ட் மூலமாக தருவதன் மூலமாக உண்மையான முறையினை தெரிந்து கொண்டு மற்றவர்களுக்கும் தெரிவிக்க உதவியாக் இருக்கும் )

தொடர்ந்திருங்கள்...



Read more ...

பைக் பஞ்சர் ஆச்சுனா என்ன பன்னலாம்..?


         
   பொதுவா பார்த்திங்கனா இந்த டூ வீலர் அவசரமா எங்கயாவது போகும் போது தான் காலை வாரி விடும். அப்படி ஆளே இல்லாத இடத்தில உங்க பைக் பஞ்சர் ஆச்சுனா தள்ளிட்டு போகனுமே அப்படிங்கற கவலைய விடுங்க. இந்த பிரச்சனைய ஈசியா சமாளிக்க என் அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.







நேற்று இரவு நான் வழக்கம் போல எனது வேலை முடிந்ததும் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தேன், வழியில்  தோழி பிரபா தனது அலுவலக பணி முடிந்ததும் வீட்டிற்கு செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அருகே சென்றதுமே எனை பார்த்து புன்னகைத்தார். 

   வாங்களேன் நான் டிராப் பன்னிடுறேன்னு அவரையும் அழைத்து கொண்டு எனது டூ வீலரில் கிலம்பினேன். 

என்னங்க ஆயுத பூஜை எல்லாம் எப்படி போச்சு..?

ம்ம்ம்... எங்க கம்பனியில் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து சாமி கும்பிட்டோம். ஆன அதுக்கு முந்தைய நாள் மட்டும்.. அப்பப்பா...  கம்பனியை முழுசுமா சுத்தம் பன்றதுக்குள்ள பென்டு கழண்டுருச்சு..

அப்படியே பேசிக்கொண்டே சிறிது தூரம் சென்றிருப்போம்..

புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.........

எப்படியோ மானத்தை வாங்கரதுக்குனே காத்திருந்தா போலே வண்டி பஞ்சர் ஆகிவிட்டது..

ஒரு நமட்டு சிரிப்புடன். கிழே இறங்கிய பிரபா..  என்ன சார் நான் பாஸ்லயே போயிருப்பேன்.. ம்ம்ம்ம்ம்.

கவலை படாதிங்க.. பத்து நிமிசத்தில் பஞ்சர் பாத்திடலாம்ம்...

எப்படி..?

வேற எப்படி பாக்குறது..? எல்லாரையும் போல வண்டிய உருட்டிகிட்டே ஏதாவது ஒர்க்ஸ் ஸாப்க்கு போக வேண்டியதுதான்.

எங்க நேரம் ஆயுத பூஜையை ஒட்டி எந்த ஒர்க்ஸ் ஸாப் -ம் திறக்கல.. .

அப்ப தான் ஒரு முடிவிற்கு வந்தேன்..

*( ரொம்ப பில்டப் பன்னுற விஷயங்கள் எப்பவுமே மொக்கையா இருக்கும்னு தெரிஞ்சும் வந்து பார்க்குற உங்களோட தைரியம் ரொம்ம பிடிச்சிருக்கு.. இருந்தாலும்.. .. )


அப்ப தான் ஒரு முடிவுக்கு வந்தேன்..

இனி ஒர்க்ஸாப் எல்லம் எதுமே இருக்காது.. பேசாம, வண்டிய தள்ளிகிட்டே ஏதாவது பேசிட்டே போகலம் என்றேன்.,

பிரபாவும்.. ம் சரி வேற வழி..?

சொல்லுங்க உங்க பிஸினஸ் எப்படி போகுது..? நீங்க எதோ புது பிஸினஸ் ஆரம்பிக்க போறதா சொன்னீங்க..?

ஆமா//

எந்த மாதிரியான பிஸினஸ்..?

புதுசா இருக்கனும்,, நாம் தான் அந்த பிஸினஸை ஆரம்பிக்க வேனும்..

இது என்ன ஒன்னுமே புரியல..

அதாவது நான் ஆரம்பிக்க போற பிஸினஸ் பாத்திங்கன்ன நம்ம வழக்கமா பன்னுற பிஸினஸ் போல இருக்க கூடாது.. நம்ம மக்களுக்கு அது புதுசா இருக்கனும்..  நாம தான் அதை முதன் முதலா ஆரம்பிக்கனும்.

அதாவது நீங்கதான் அந்த தொழிலின் தந்தையா இருக்கனும் அப்படித்தானே..?

ம்ம்ம்ம். அப்படின்னு சொல்லலாம்.. ஆன பார்திங்கன பிரபா என்னைய பொருத்த வரை நாம பணம் சம்பாதிப்பதை காட்டியும் வருங்கால சந்ததியினர் நம்ம பேர சொல்லும் படி ஏதாவது ஒரு விசயத்தை செய்துவிட்டு போகனும்.

சரிதாங்க.. ஆன நாம ஒரு தொழிலையையோ அல்லது ஒரு சிந்தனையையோ கண்டுபிடிச்சு அதிலே வெற்றி பெருவதென்பது சாதாரண விசயமில்லையே..?

ஆமா.. ஆன, விடா முயற்சி இருந்தால் கண்டிப்ப நாம சாதிச்சு காட்ட முடியுமே..?

நீங்க ஒரு நல்ல தொழில்முனைவோரா இருந்தாலே நீங்க சாதித்ததாக அர்த்தப்படுமே..?

கண்டிப்பா.. அதைக் காட்டிலும் நான் ஒரு புது முயற்சியில் தொடங்கி வெற்றி பெருவதையே விரும்புகிறேன்..

   இப்ப நீங்க செய்யுற தொழில் வாய்ப்பானது உங்கள் பொருளாதாரத்தையும் உயர்த்தும். உங்கள் புகழையும் உயர்த்தும். ஆன, புதுசா ஒரு முயற்சியில் இறங்கும் போது அதில் வெற்றி பெற்றாலே தவிற புகழும், பொருளும் கிடைப்பதில்லை..? அப்படி பார்த்த இங்க புதுசா ஒரு விசயத்தை தோற்றுவிப்பதற்காக லட்சம் பேர் முயற்சி செய்யிறாங்க அதில ஒருத்தர் மட்டும் தானே வெற்றி பெற முடியும்.. நீங்க வெற்றி பெரும் ஒருத்தரை உந்துதலா எண்ணி உங்க வாழ்க்கையை பணயம் வைப்பது முட்டால் தனமான விசயம் தானே..?

இல்லைங்க பிரபா.. நீங்க சொல்வது முற்றியும் தவறு..
....மே பி..   நீங்க சொல்வது போல முயற்சி செய்யும் லட்சம் பேரில் ஒருத்தர் மட்டும் தான் வெற்றி பெற முடியும்.  ஆன அந்த ஒருத்தர் நாம தான் என்கின்ற தன்னம்பிக்கையை நீங்க முட்டால் தனம் என்பது மிகவும் தவறாகும்..

இப்ப,, நாம ஒவ்வொருவரும் காலைல வீட்டை விட்டு வரும் போது என்ன நினைச்சுட்டு வருகின்றோம்.? வேலைக்கு போய்விட்டு எப்படியாச்சும் சீக்கரமா வீட்டுக்கு வரனும், பாப்பாவ கொஞ்சனும்,  சமையல் செய்யனும் அப்படித்தானே.... அதில்லாம,, ஹாஸ்பிடலுக்கு அடிபட்டு போக போறோம்ன்னா  நினைக்கிறோம்..? ஏன்னா... தினம் தினம் நம சாலையில் போகும் போது யாரவது ஒருத்தர் விபத்தில் தன் உறுப்புகளையோ.. அல்லது உயிரையோ இழக்கின்றார்கள். அப்படின்னா.. அந்த ஒருத்தர் நாமாக கூட இருக்கலாம் அல்லவா..? ஏன் நாம அதைப் பற்றி கவலை படாமல் வீட்டை விட்டு கிலம்புகிறோம்..?

ஒரு விசயத்தை செய்யும் போது ஆயிரம் தடைகள் எப்படிப் பட்ட வழிகளிலும் வரலாம்..? அதை சமாளிக்கும் தைரியத்தை நாம் தான் வளர்க்க வேண்டும்.. அதை விட்டு விட்டு நாம் தோற்று விடுவோமே என்று பயப்பட ஆரம்பித்தால் ஒவ்வொரு விசயத்திற்காகவும் பயந்து கொண்டே இருக்க வேண்டியது தாங்க..

ம்ம்ம். நீங்க சொல்வதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆன வீணா எதுக்கு மெனக்கெடுவானேன்னு தான் அப்படி சொன்னேன்..

இல்லைங்க.. வீண் என்கின்ற வார்த்தையினை தவிற எதுவுமே இந்த உலகத்தில் வீண் இல்லைங்க..

    நீங்க நினைச்ச மாதிரியே எல்லோரும் நினைச்சிருந்தாங்கன்ன இந்த உலகத்தில் மாற்றமே எதுவும் வந்திருக்காது.. நமக்கு தெரிந்த மட்டுமே எடிசனும், கிரகாம்பெல்லும் மெனக்கெட்டு உழைக்க தவறி இருந்திருந்தால் உலகிற்கு முக்கியமான இரு விசயங்களான லைட்டும், தொலைப்பேசியும் வந்திருக்குமா..?
இன்னைக்கு உலகையே தன் உள்ளங்கையில் வைத்திருக்கும் கைப்பேசி இன்றைய உருவத்திற்காக எத்தனை பேரோட உழைப்பையும் நேரத்தையும் சுரண்டியிருக்கும்..?  இன்னைக்கு நாம செய்யுற ஒரு விசயத்துக்காக இன்னும் பல வருடங்களில் வர விருக்கும் மற்றவர்களுக்கும் பயனளிக்க கூடியதாக இருக்கும் பட்சத்தில் எப்படிங்க வீண் என்கின்ற வார்த்தை முலைக்கும்..?

பஞ்சர் கடை இன்னும் வரலைங்க.. 

( கடைய கண்டு பிடிக்கிற வரைக்கும் இப்படியே வண்டிய தள்ளிக்கிட்டு ஏதாவது பேசிக்கிட்டே போங்க..? பஞ்சர் பத்தி கவலையே பட வேண்டியதில்ல.. )
(சிங்கிளா போகும் போது பஞ்சர் ஆச்சுனா..?
.... அதுக்கும் கவலை வேண்டாம்.. இதை விட சூப்பர் ஐடியா அடுத்த பதிவில் வச்சிருக்கிறேன்ன்ன்ன்ன்ன் )








Read more ...

Eppadinga mobile la tamil la elutharathu?

Ithu ennoda mble la irunthu anupara muthal pathivu. Enaku tamil la type panra method eppadinu theriyala. Therinjavanga cmd la sollungalen. Mobile la E kalapai instal seiya mudiuma ?
Read more ...

சவுண்டு சர்வீஸ் தொடங்கலாம் சவுகரியமா சம்பாதிக்களாம்..

இன்றைய நவீன உலகத்தில் DVD மற்றும் Home Theatre சேல்ஸ் & சர்வீஸ் தொழில் தொடங்கி அதை வெற்றிகரமாக நடத்திகாட்டிட தன்னுடைய அனுபவங்களையும் வெற்றிப் பாதையையும் உங்களுடன் சேர்த்து பயனிக்க நண்பர் R.வீரா அவர்கள் பகிர்ந்துகொள்கிறார்.


வணக்கம்ங்க..

      என்னுடை 13 வது வயதில் முதன்முதல்லாக  ஒரு சர்வீஸ் சென்டரில் வேலைக்கு சேர்ந்தேன். கொஞ்சம் கொஞ்சமாக வேலையை கத்துக்க தொடங்கினேன். எனக்கு 20 வயது ஆகும் போது சொந்தமாக நானே ஒரு சவுண்ட் சர்வீஸ் சென்டர் தொடங்கினேன். அன்னையில் இருந்து என்னைய என் தொழில் பத்திரமா பார்த்துகுதுங்க.. 

    எத்தனையோ எலக்ட்ரானிக் துறை பத்தின  இன்ஜினீரிங் படிப்பெல்லாம் இப்ப வந்துருச்சுங்க. எம் பையன கூட எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் சம்பந்தமான படிப்பையே படிக்க வைக்க திட்டமிட்டுள்ளேன். அவனும் இதில் மிக ஆர்வமாக இருக்கிறான். படிக்கும் நேரம் போக மீதி நேரங்களில் அவன் என்னுடன் கடக்கு வந்து ஆர்வமா பார்த்துட்டு இருக்கான். சொல்ல போனா கூடிய சீக்கரமே எனக்கு எதிரா ஒரு கைடை புடிச்சு உட்கார்ந்துடுவான் போல  இருக்கு...

சிறிய புன்னகையுடன் தனது தொழில் ஆலோசனைகளை பகிர்கிறார்..

உங்கள் ஏரியாவில் சுமார் 10*16 அளவிலான ஒரு சிறிய கடையை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்..

பொதுவா DVD மற்றும் Home Theatre  சேல்ஸ் பாத்திங்கன ரொம்ப நல்லவே போகுதுங்க.
கடைக்கு தேவையான அட்வான்ஸ் தொகை போக, கொஞ்சம் இன்டீரியர் மற்றும் செல்ப் ரேக் அமைக்க செலவு செய்ய வேண்டியிருக்கும். நீங்கள் ஒரு சிறந்த கற்பனையாளர்னா குறைந்த செலவில் மிக சிறப்பா உங்களது கடையினை நீங்க அமைத்து கொள்ளலாம்.

இன்டீரியர் மற்றும் பெயின்டிங் வேலையை முடிச்சதும். சரக்கு எடுக்க நீங்க வேறு எங்கும் தேடாதிங்க. அனைத்து மாவட்டங்களிலுமே பெரிய DVD மற்றும் Home Theatre  நிறுவங்கள் அங்கீகரிக்கப் பட்ட விற்பனை நிலையங்களை அமைத்துள்ளன. எனவே அங்கு சென்று உங்களது கடையினது விசிடிங் கார்டை கொடுத்து மொத்த விலைக்கு பொருட்களை வாங்கி வைத்து கொள்ளலாம். சென்னை, பெங்கலூர் மற்றும் கோவை போன்ற பெரு நகரங்களில் இன்னும் குறைந்த விலையில் DVD மற்றும் Home Theatre பொருட்கள் மற்றும் அதற்கான சர்வீஸ் பொருட்களை வாங்கிகலாம். முதல் முறை மட்டும் நீங்கள் நேரடியாக சென்று உங்களது DVD மற்றும் Home Theatre  சாதங்களை மொத்த விலையில் வாங்கிகொள்ளுங்கள். பிறகு தேவைப்படும் சமயங்களில் தொலைபேசி வாயிலாக தெரிவித்தால் போதும் அங்கீகரிக்கப் பட்ட விற்பனை நிலையங்களில் இருந்தே விற்பனை பிரதிநிதிகள் உங்களை தொடர்புகொண்டு உங்களது கடைக்கே வந்து சப்ளை செய்து விடுவார்கள். இதில் மேலும் சிறப்பு என்ன வென்றால் ஒரிரு பறிமாற்றங்களை நாம் சரியாக செய்துவிடுவோமேயானால் அவர்கள் நம்மை ஊக்குவிக்கும் முறையில் நாம் தரும் பணத்தின் மதிப்பை காட்டிலும் அதிக மதிப்பில் சாதங்களை இறக்கிவிடுவார்கள். நாம் விற்பனை செய்து வரும் லாபத்தில் மீதி தொகையை திருப்பி தந்துவிடலாம்.

      உதாரணமாக நாம் ஒரு பத்தாயிரம் செலுத்தி ஆர்டர் போடுவோமேயானால்   கம்பெனி சுமார் 30 ஆயிரம் வரையிலான பொருட்களை கூட நமக்கு இறக்கிவிட்டு போஇவிடும். பிறகு நாம் விற்பனையை செய்து மீதி தொகைகளை எளிய தவனைகளில் செலுத்திவிடலாம். நாம் நாணயமாக நடக்கும் பட்சத்தில் கம்பனிகள் நமக்கு மேலும் மேலும் பல ஊக்கங்களை அளிக்க தயாராக இருக்கின்றன.

சரி பொருட்களினை வாங்கி வச்சுடோம். அதை விற்பனை செய்ய வேண்டுமில்லையா..?

   முதலில் உங்களது வாடிக்கையாளர்களின் வருகையை அதிகரிக்கும் பொருட்டு நிறைய விளம்பரங்களை செய்யுங்கள். தெரிந்தவர்கள் நண்பர்கள் மத்தியில் உங்களது பொருளுக்கான சந்தையினை ஏற்படுத்துங்கள். நாளடைவில் வியாபாரம் செழிப்படைய தொடங்கி விடும். வாடிக்கையாளர்களை திருப்தி படுத்த முதலில் அவர்களது தேவையை புரிந்து கொண்டு DVD மற்றும் Home Theatre  போன்றவற்றின் தரத்தையும் அதற்கு கம்பனி தரும் சர்வீஸ் வாராண்டி பற்றின த்கவல்களையும் அளியுங்கள். விலையையை கூட்டியோ குறைத்தோ  சொல்லி விக்காதீர்கள். இரண்டுமே நம்பிக்கையை கெடுத்துவிடும். பொருக்கான தரத்தை பொருத்தே வாடிக்கையாளர்கள் திறும்பவும் வருவார்கள் எனவே குறைந்த விலையில் கிடைக்கும் தரமற்ற லோக்கல் சாதனங்களை சிபாரிசு செய்வதை குறைத்து கொள்ளுங்கள்..

இவ்வாறாக நடந்தால் வாடிக்கையாளர்கள் வாடிக்கையாக உங்கள் கடைக்கு வருவது நிச்சயம்

பெரும்பாலும் இது போன்ற DVD மற்றும் Home Theatre  சர்வீஸ் சென்டர்கள் விற்பனையில் மட்டுமல்ல் சர்வீஸ் செய்து கொடுப்பதிலேயே தனது லாப விகிதத்தை பெருக்குகின்றன..

நான் உங்களகு பரிந்துரை செய்ய விரும்புவது, நீங்கள் நம்பிக்கையாக நடந்து கொள்ளும் பட்சத்தில் உங்களில் பொருட்களை வாங்கி செய்பவர்கள் தங்களது DVD மற்றும் Home Theatre  சாதனங்களை ரிப்பெயரிங் சர்வீஸ் காக உங்களிடமே கொண்டு வருவார்கள். அப்படி வரும் போது உங்களுக்கு சர்வீஸ் செய்ய தெரியும் பட்சத்தில் நீங்களே சர்வீஸ் செய்து கொடுங்கள். இல்லையென்றால் கவலை பட தேவை இல்லை.. சர்வீஸ் மட்டுமே செய்து கொடுப்பவர்கள் எப்படும் உங்களது கடைக்கு வாடிக்கையாளராகவோ அல்லது நண்பர்களாகவோ அனுகுவார்கள். அவர்களிடம் தொடர்ந்து நீங்கள் சர்வீஸ் செய்து உங்கள் வாடிககையாளரிடம் கொடுக்கலாம். மேலும் ஸ்பேர்ஸ் வாங்கி போட்டு சர்வீஸ் செய்யும் போது மிகுந்த லாபத்தை பார்க்கலாம்.

பொதுவாக எனது கடைக்கு வந்து சர்வீஸ் செய்யும் சர்வீஸ் மேன்கள் நிச்சயமாக ஒரு நாளைக்கு 500 ரூ. வரை சம்பாதிக்கின்றனர். அப்படியென்றால் பார்த்துகொள்ளுங்கள்.

பொதுவாக 20% லிருந்து 40%  உங்களது இலாபமானது அமையும்.

ஒரு நாலைக்கு இரண்டு DVD மற்றும் Home Theatre  விற்றாலே போது மாதம் 10 ஆயிரத்திலிருந்து 15 ஆயிரம் வரை சம்பாதிக்களாம். அதுபோக சர்வீஸ் விகிதத்தில் பார்த்தால் எப்படியும் தினமும் ரூ.300 உறுதியாக வரும்.

சுமார் ஒரு இலட்சம் முதல் இரண்டு இலட்சம் வரை இருந்தாலே போதும்.
உங்களது தொழில் கன்னியமாக நடக்கும் பட்சத்தில் உங்களது வெற்றியானது தீர்மானிக்க படும்.

எப்படியும் தொழில் தொடங்கிய ஒரிரு மாதங்கள் சற்றே சருக்கல்கள் வருவது சகஜம், அதற்கு பயந்து தளர்ந்து விடாதீர்கள் தொடர்ந்து முயற்சி செய்தால் வாடிக்கையாளர்கள் அதிகரித்து உங்களது பாக்கெட்டை நிரப்புவார்கள்.

முயலுங்கள்.. வெற்றி நிச்சயம்... வளருங்கள்..

வாழ்த்துகளுடன்..
R.வீரா

நன்றி!!


Read more ...

இது எங்களோட தப்பு இல்லீங்கோ..

துக்கிரிதனமா பேசிக்கினு இருந்த துன்ற சோத்துக்கு தாளம் தான்ட போடனும்..

இன்னாட சொல்லிகினு இருக்கேன் தாளமா போடுறே..?

சொன்னத கேட்டுதான் தாளம் போடுறேன்..

ஆ ஆ கண்ணம் வரைக்கும் கிழியிது வாய் துடுக்கு..

இன்னும் கூட கிழியும் காது தடுக்கும்..

புரியாம பேசாதே பல்ல தட்டுவேன்..

பேசறதே புரியாது பொக்கையாயிடுவேன்.. பிப்பி பிப்பி பீ..

ஆர பாத்து பேசறேனு நெனைப்பிக்குதா..?

பேரு வைச்ச ஆத்தாவ மறப்பேனா...

வம்பு பன்னுனே கொன்னுபுடுவேன்..

ஆ ஆ ஆ ஆ நி வளர்தது அப்புடி.. நான் இன்னா பன்னுவே..

ராங்கு பன்னாதே எங்கையில ராங்கு காட்டுனா எல்லாமே ராங்கா பூடும்..

அது எப்புடி பூடும்..?
ராஜா கைய வைச்சா ஏன்டா டேய் அது ராங்கா பூடுமாடா..?

பூட்ஹ்க்க்ட்ச்க் பூச்ல்ட்ல்ச்ட்

தா ட ச்சீ.. இப்பென்ன பூடும்றீங்களா.. பூடாதுன்றீங்களா..?

 போவாது.. போவாது..

அப்படி சொல்லு.. யக்கூ...

ராஜா கைய வைச்சா... ஆ.. ஆ.. ஆ.. ஆ.. அது ராங்கா போனதில்லை..
         --- ----- ------ ------ --------------------- -------------------         ------------

இப்படித்தாங்க இன்னும் நம்ம ஹமாம் சோப்பு அம்மாக்கள் மாறாம எப்பவுமே நம்மை திட்டிக்கிட்டே இருக்காங்க..

நாமெல்லாம் யாருங்க..`?

சும்மா அந்தர் பன்ன வேண்டாமா...?

ம்ம்..  சரி விசயத்துக்கு வருவோம்..

பொதுவாக காலேஜ் முடிந்த இரண்டு வருடமா நம்ம இளைஞன் படுற பாடு தாங்க
  
Read more ...

ஜில்.. ஜில்.. ஜிகர்தண்டா ( மதுரை ஸ்பெஷல் )

ஜில்லுனு தொழில் செய்யலாம்... ஜிவ்வுனு காசு பார்க்கலாமா..?

ஜிகர்தண்டா இருக்கு//.

அடேயப்பா மதுரை அருவாளுக்கு மட்டும் அல்லங்க ஜிகர்தண்டாக்கும் பேர் போனதுங்க.. நம்ம ஊருலேயும் மதுரை மணத்தோடு ஜிகர்தண்ட தொழில் தொடங்க தோழர் சீனிவாசன் அவர்கள் சொல்லும் ஆலோசனைகளை வரவேற்கிறோம்..

கடந்த 12 வருடங்களாக ஜிகர்தண்டா மற்றும் பாதாம் பால் தொழில் தொடங்கி நான் சந்தித்த அனுபவங்களை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

பொதுவாக மதுரை மாவட்டங்களில் மட்டுமே சுவை மிகுந்த ஜிகர்தண்டா தொழில் பரவலாக இருக்கிறது.. குறைந்த முதலீட்டில் அதிக வருவாயை தரக்கூடிய ஜிகர்தண்டா தொழிலை ஏனைய மாவட்டங்களிலும் சிறப்பாக தொடங்கி வெற்றிகரமான வருவாயை ஈட்ட என்னுடன் பயணிக்க உங்களையும் அழைக்கிறேன்..

மூலதனமாக கடின உழைப்புடன் கூடிய..,


  • 10x16 அளவிலான சுகாதாரமிக்க அறை
  • விறகு அடுப்பு ஒன்று
  • 30லி கொள்ளளவுள்ள ஒரு அலுமினிய பாத்திரம்
  • நன்னாரி சர்பத் 
  • ஐஸ்கிரீம் மேனுவல் மெசின்
  • 0.5HP அளவுள்ள மின் மோட்டார்
  • ஒரு வாகனம் ( TVS Excel ) 
  • குளிர்பதன பெட்டி மற்றும்
  • கடைக்கு தேவையான ஸ்டால் கூண்டு
ஆகமொத்தம் குறைந்த பட்சம் ரூ.50000 முதலீடு இருந்தால் போதும்.. 




ஜிகர்தண்டா செய்யும் முறை :

  • நன்கு காய்ச்சிய தூய்மையான பால்
  • நன்னாரி சர்பத்
  • கடல் பாசி
  • பாலாடை
  • வெண்ணிலா ஐஸ்கிரீம்
தேவையான பதத்தில் கலந்து கொடுத்தால் ஜில்லுனு ஜிகர்தண்டா ரெடி..

பால் காய்ச்சும் முறையானது., முந்தைய நாள் இரவிலேயே சுமார் 10லி பாலினை 5லி ஆகும்படி கொதிநிலையில் சுமார் 4 மணி நேரம் காய்ச்சவும். பிறகு தனல் வெப்பத்திலேயே இருக்கும் படி பாலை அமர்த்தி இரவு முழுவதும் வைத்து விடவும்.. 5லி பாலானது சுமார் 3லி அள்விற்கு பதமாகிவிடும். பிறகு விற்பனைக்கு கொண்டு செல்லும் பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளலாம்..
விற்பனை நிலையத்தில் வைத்து பாலுடன் நன்னாரி சர்பத், கடல் பாசி,  பாலாடை ஆகியவற்றை போதுமான அளவில் கலந்து மேலே வெண்ணிலா ஐஸ்கிரீம் வைத்து கொடுத்தால் போதும் சுவையான ஜில்லென்ற ஜிகர்தண்டா ரெடியாகிவிடும்...

குறிப்பு : ஐஸ்கிரிம் மெசின் வாங்க முடியாதவர்கள் அதனை கிலோ கணக்கில் ஆர்டர் செய்து ஐஸ்கிரீம் கடைகளில் வாங்கி வைத்து கொள்ளலாம்..
கடல் பாசியை சுமார் 5 மணி நேரமாவது முன்பே ஊரவைத்துக் கொள்ளவும்.

45% அளவில் நாம் செய்யும் முதலீடுக்கு ஏற்ப்ப இலாபம் பார்க்கலாம்.
சராசரியாக ஒரு டம்ளர் ஜிகர்தண்டாவை ரூ.15 க்கு விற்கலாம்.
நமக்கு ஒரு டம்ளருக்கு 5 முதல் 6 ரூபாய் வரை லாபம் கிடைக்கும்.

மேலும் ஜிகர்தண்டா தொழிலில் பார்ட்னராகவோ அல்லது தொழில் முறை தகவலுக்கு எம்மை தொடர்பு கொள்ளுங்கள். முடிந்த வரை தங்களுக்கான ஆலோசனைகளை வழங்க ஆயத்தமாக உள்ளேன்..






தொடர்புக்கு :

83446 04862
அல்லது
maduraijigarthanda@gmail.com என்ற மின் அஞ்சலிலும் தொடர்பு கொள்ளுங்கள்

///////////////////////////////////////////
//////////////////////////////

நன்றி திரு.சீனிவாசன்


மேலும் சுவைக்க..,

......
....


அடி முட்டாள் பெண்ணே..!

உருவமும்..,
ஓசையும் கொண்ட
என் தமிழிடம்
உணர்வுகளை பங்கிட
என் உள்ளம்...



மேலும் ரசிக்க.. Click :  http://malaikkathalan.blogspot.com


Get cash from your website. Sign up as affiliate
Read more ...

சூப்பர் மார்க்கெட் சொந்தமாக தொடங்க

5500 ரூபாய் முதலீட்டில் சூப்பர் மார்க்கெட் தொடங்கலாங்க..
Read more ...

வாருங்கள் வழி காட்டுங்கள்

வர்த்தகம், வியாபாரம், தொழில், வணிகம், வாணிபம் என்றெல்லாம் பெயர் கொண்டிருந்தாலும் தொழில் தொடங்கவும் அதை திறமையாக நடத்தவும் தொழில் முறை சார்ந்த அனுபவ அறிவை சிறிதேனும் தெரிந்து கொன்டாலேயே அன்றி முழுமையான தொழில் வல்லுனராக இயலாது. எனவே நமது வலைதளத்திற்கு வருகை தரும் அனைவரும் பயன்பெரும் வகையில் சிறப்பான தொழில் சார்ந்த பதிவுகளினை இட தீர்மானித்துள்ளோம். சக வலைப்பதிவாளர்கள் தங்களின் தொழில் முறை கருத்துக்களையும், அனுபவங்களையும் கமெண்ட் மற்றும் press4business@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் மூலமாகவோ தொடர்பு கொண்டு தெரிவிப்பதின் மூலம் மற்றவர்களும் பயன் அடையச்செய்யலாம்.



  • தாங்கள் MLM போன்ற துறையில் வல்லுனராக திகழ்பரா..? அல்லது புதிதாக தொடங்கியுள்ளிர்களா..? 
  • இன்டர்நெட் மற்றும் இணைய வடிவமைப்பு துறை சார்ந்தவரா..?
  • கேட்ரிங்க் அல்லது ஹோட்டல் தொடர்பான துறை பொருளிட்டாரா..?
  • பிரிண்டிங், காலண்டர் டிசைன் போன்ற வேலை செய்து தருபவரா..
  • உங்களது சொந்த பிராண்ட் அல்லது பொருளை சந்தை படுத்த வேண்டுமா.?
  • அட, உங்கள் வலைப்பதிவையேனும் கூட எமது பதிவில் விளம்பர படுத்த வேண்டுமா..? ( தொழில், வணிகம் சம்பந்தமான பதிவர்கள் உடனடியாக ஏற்றுக்கொள்ள படுவர்கள் )
  • சேர் மார்க்கெட் அல்லது வேறு வகைப்பட்ட புக்கிங் அல்லது புரோக்கிங் அலுவலகமா..?
  • டூர்ஸ் மற்றும் டிராவல்ஸ் சென்டரா..?
  • கம்ப்யூட்டர் பயிற்சி நிலையமா..?
  • மெக்கானிக் சர்வீஸ் செய்பவரா..?
  • இறக்குமதி, ஏற்றுமதி நிறுவனமா..?
  • ஆர்டர் தேடுபரா..? அல்லது கொடுக்க வேண்டுமா..?


     உங்களது கம்பெனி பற்றி தெளிவாக விளக்க குறிப்புடன் உங்களது தொலைப்பேசி எண்ணையும் பகிர்வதின் மூலம் இந்த தளத்திலிருந்து மேலும் உங்களது தொழிலை இலவசமாக விரிவு படுத்துங்கள்.

தொடர்புக்கு

 press4business@gmail.com

Get cash from your website. Sign up as affiliate
Read more ...

வருமானத்தை பெருக்க வளமான வழிகள்...

நமது மாத வருமானத்தை இரட்டிபாக்கலாம்
Read more ...