Showing posts with label சுவை நகை. Show all posts
Showing posts with label சுவை நகை. Show all posts

பைக் பஞ்சர் ஆச்சுனா என்ன பன்னலாம்..?


         
   பொதுவா பார்த்திங்கனா இந்த டூ வீலர் அவசரமா எங்கயாவது போகும் போது தான் காலை வாரி விடும். அப்படி ஆளே இல்லாத இடத்தில உங்க பைக் பஞ்சர் ஆச்சுனா தள்ளிட்டு போகனுமே அப்படிங்கற கவலைய விடுங்க. இந்த பிரச்சனைய ஈசியா சமாளிக்க என் அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.







நேற்று இரவு நான் வழக்கம் போல எனது வேலை முடிந்ததும் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தேன், வழியில்  தோழி பிரபா தனது அலுவலக பணி முடிந்ததும் வீட்டிற்கு செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அருகே சென்றதுமே எனை பார்த்து புன்னகைத்தார். 

   வாங்களேன் நான் டிராப் பன்னிடுறேன்னு அவரையும் அழைத்து கொண்டு எனது டூ வீலரில் கிலம்பினேன். 

என்னங்க ஆயுத பூஜை எல்லாம் எப்படி போச்சு..?

ம்ம்ம்... எங்க கம்பனியில் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து சாமி கும்பிட்டோம். ஆன அதுக்கு முந்தைய நாள் மட்டும்.. அப்பப்பா...  கம்பனியை முழுசுமா சுத்தம் பன்றதுக்குள்ள பென்டு கழண்டுருச்சு..

அப்படியே பேசிக்கொண்டே சிறிது தூரம் சென்றிருப்போம்..

புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.........

எப்படியோ மானத்தை வாங்கரதுக்குனே காத்திருந்தா போலே வண்டி பஞ்சர் ஆகிவிட்டது..

ஒரு நமட்டு சிரிப்புடன். கிழே இறங்கிய பிரபா..  என்ன சார் நான் பாஸ்லயே போயிருப்பேன்.. ம்ம்ம்ம்ம்.

கவலை படாதிங்க.. பத்து நிமிசத்தில் பஞ்சர் பாத்திடலாம்ம்...

எப்படி..?

வேற எப்படி பாக்குறது..? எல்லாரையும் போல வண்டிய உருட்டிகிட்டே ஏதாவது ஒர்க்ஸ் ஸாப்க்கு போக வேண்டியதுதான்.

எங்க நேரம் ஆயுத பூஜையை ஒட்டி எந்த ஒர்க்ஸ் ஸாப் -ம் திறக்கல.. .

அப்ப தான் ஒரு முடிவிற்கு வந்தேன்..

*( ரொம்ப பில்டப் பன்னுற விஷயங்கள் எப்பவுமே மொக்கையா இருக்கும்னு தெரிஞ்சும் வந்து பார்க்குற உங்களோட தைரியம் ரொம்ம பிடிச்சிருக்கு.. இருந்தாலும்.. .. )


அப்ப தான் ஒரு முடிவுக்கு வந்தேன்..

இனி ஒர்க்ஸாப் எல்லம் எதுமே இருக்காது.. பேசாம, வண்டிய தள்ளிகிட்டே ஏதாவது பேசிட்டே போகலம் என்றேன்.,

பிரபாவும்.. ம் சரி வேற வழி..?

சொல்லுங்க உங்க பிஸினஸ் எப்படி போகுது..? நீங்க எதோ புது பிஸினஸ் ஆரம்பிக்க போறதா சொன்னீங்க..?

ஆமா//

எந்த மாதிரியான பிஸினஸ்..?

புதுசா இருக்கனும்,, நாம் தான் அந்த பிஸினஸை ஆரம்பிக்க வேனும்..

இது என்ன ஒன்னுமே புரியல..

அதாவது நான் ஆரம்பிக்க போற பிஸினஸ் பாத்திங்கன்ன நம்ம வழக்கமா பன்னுற பிஸினஸ் போல இருக்க கூடாது.. நம்ம மக்களுக்கு அது புதுசா இருக்கனும்..  நாம தான் அதை முதன் முதலா ஆரம்பிக்கனும்.

அதாவது நீங்கதான் அந்த தொழிலின் தந்தையா இருக்கனும் அப்படித்தானே..?

ம்ம்ம்ம். அப்படின்னு சொல்லலாம்.. ஆன பார்திங்கன பிரபா என்னைய பொருத்த வரை நாம பணம் சம்பாதிப்பதை காட்டியும் வருங்கால சந்ததியினர் நம்ம பேர சொல்லும் படி ஏதாவது ஒரு விசயத்தை செய்துவிட்டு போகனும்.

சரிதாங்க.. ஆன நாம ஒரு தொழிலையையோ அல்லது ஒரு சிந்தனையையோ கண்டுபிடிச்சு அதிலே வெற்றி பெருவதென்பது சாதாரண விசயமில்லையே..?

ஆமா.. ஆன, விடா முயற்சி இருந்தால் கண்டிப்ப நாம சாதிச்சு காட்ட முடியுமே..?

நீங்க ஒரு நல்ல தொழில்முனைவோரா இருந்தாலே நீங்க சாதித்ததாக அர்த்தப்படுமே..?

கண்டிப்பா.. அதைக் காட்டிலும் நான் ஒரு புது முயற்சியில் தொடங்கி வெற்றி பெருவதையே விரும்புகிறேன்..

   இப்ப நீங்க செய்யுற தொழில் வாய்ப்பானது உங்கள் பொருளாதாரத்தையும் உயர்த்தும். உங்கள் புகழையும் உயர்த்தும். ஆன, புதுசா ஒரு முயற்சியில் இறங்கும் போது அதில் வெற்றி பெற்றாலே தவிற புகழும், பொருளும் கிடைப்பதில்லை..? அப்படி பார்த்த இங்க புதுசா ஒரு விசயத்தை தோற்றுவிப்பதற்காக லட்சம் பேர் முயற்சி செய்யிறாங்க அதில ஒருத்தர் மட்டும் தானே வெற்றி பெற முடியும்.. நீங்க வெற்றி பெரும் ஒருத்தரை உந்துதலா எண்ணி உங்க வாழ்க்கையை பணயம் வைப்பது முட்டால் தனமான விசயம் தானே..?

இல்லைங்க பிரபா.. நீங்க சொல்வது முற்றியும் தவறு..
....மே பி..   நீங்க சொல்வது போல முயற்சி செய்யும் லட்சம் பேரில் ஒருத்தர் மட்டும் தான் வெற்றி பெற முடியும்.  ஆன அந்த ஒருத்தர் நாம தான் என்கின்ற தன்னம்பிக்கையை நீங்க முட்டால் தனம் என்பது மிகவும் தவறாகும்..

இப்ப,, நாம ஒவ்வொருவரும் காலைல வீட்டை விட்டு வரும் போது என்ன நினைச்சுட்டு வருகின்றோம்.? வேலைக்கு போய்விட்டு எப்படியாச்சும் சீக்கரமா வீட்டுக்கு வரனும், பாப்பாவ கொஞ்சனும்,  சமையல் செய்யனும் அப்படித்தானே.... அதில்லாம,, ஹாஸ்பிடலுக்கு அடிபட்டு போக போறோம்ன்னா  நினைக்கிறோம்..? ஏன்னா... தினம் தினம் நம சாலையில் போகும் போது யாரவது ஒருத்தர் விபத்தில் தன் உறுப்புகளையோ.. அல்லது உயிரையோ இழக்கின்றார்கள். அப்படின்னா.. அந்த ஒருத்தர் நாமாக கூட இருக்கலாம் அல்லவா..? ஏன் நாம அதைப் பற்றி கவலை படாமல் வீட்டை விட்டு கிலம்புகிறோம்..?

ஒரு விசயத்தை செய்யும் போது ஆயிரம் தடைகள் எப்படிப் பட்ட வழிகளிலும் வரலாம்..? அதை சமாளிக்கும் தைரியத்தை நாம் தான் வளர்க்க வேண்டும்.. அதை விட்டு விட்டு நாம் தோற்று விடுவோமே என்று பயப்பட ஆரம்பித்தால் ஒவ்வொரு விசயத்திற்காகவும் பயந்து கொண்டே இருக்க வேண்டியது தாங்க..

ம்ம்ம். நீங்க சொல்வதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆன வீணா எதுக்கு மெனக்கெடுவானேன்னு தான் அப்படி சொன்னேன்..

இல்லைங்க.. வீண் என்கின்ற வார்த்தையினை தவிற எதுவுமே இந்த உலகத்தில் வீண் இல்லைங்க..

    நீங்க நினைச்ச மாதிரியே எல்லோரும் நினைச்சிருந்தாங்கன்ன இந்த உலகத்தில் மாற்றமே எதுவும் வந்திருக்காது.. நமக்கு தெரிந்த மட்டுமே எடிசனும், கிரகாம்பெல்லும் மெனக்கெட்டு உழைக்க தவறி இருந்திருந்தால் உலகிற்கு முக்கியமான இரு விசயங்களான லைட்டும், தொலைப்பேசியும் வந்திருக்குமா..?
இன்னைக்கு உலகையே தன் உள்ளங்கையில் வைத்திருக்கும் கைப்பேசி இன்றைய உருவத்திற்காக எத்தனை பேரோட உழைப்பையும் நேரத்தையும் சுரண்டியிருக்கும்..?  இன்னைக்கு நாம செய்யுற ஒரு விசயத்துக்காக இன்னும் பல வருடங்களில் வர விருக்கும் மற்றவர்களுக்கும் பயனளிக்க கூடியதாக இருக்கும் பட்சத்தில் எப்படிங்க வீண் என்கின்ற வார்த்தை முலைக்கும்..?

பஞ்சர் கடை இன்னும் வரலைங்க.. 

( கடைய கண்டு பிடிக்கிற வரைக்கும் இப்படியே வண்டிய தள்ளிக்கிட்டு ஏதாவது பேசிக்கிட்டே போங்க..? பஞ்சர் பத்தி கவலையே பட வேண்டியதில்ல.. )
(சிங்கிளா போகும் போது பஞ்சர் ஆச்சுனா..?
.... அதுக்கும் கவலை வேண்டாம்.. இதை விட சூப்பர் ஐடியா அடுத்த பதிவில் வச்சிருக்கிறேன்ன்ன்ன்ன்ன் )








Read more ...

இது எங்களோட தப்பு இல்லீங்கோ..

துக்கிரிதனமா பேசிக்கினு இருந்த துன்ற சோத்துக்கு தாளம் தான்ட போடனும்..

இன்னாட சொல்லிகினு இருக்கேன் தாளமா போடுறே..?

சொன்னத கேட்டுதான் தாளம் போடுறேன்..

ஆ ஆ கண்ணம் வரைக்கும் கிழியிது வாய் துடுக்கு..

இன்னும் கூட கிழியும் காது தடுக்கும்..

புரியாம பேசாதே பல்ல தட்டுவேன்..

பேசறதே புரியாது பொக்கையாயிடுவேன்.. பிப்பி பிப்பி பீ..

ஆர பாத்து பேசறேனு நெனைப்பிக்குதா..?

பேரு வைச்ச ஆத்தாவ மறப்பேனா...

வம்பு பன்னுனே கொன்னுபுடுவேன்..

ஆ ஆ ஆ ஆ நி வளர்தது அப்புடி.. நான் இன்னா பன்னுவே..

ராங்கு பன்னாதே எங்கையில ராங்கு காட்டுனா எல்லாமே ராங்கா பூடும்..

அது எப்புடி பூடும்..?
ராஜா கைய வைச்சா ஏன்டா டேய் அது ராங்கா பூடுமாடா..?

பூட்ஹ்க்க்ட்ச்க் பூச்ல்ட்ல்ச்ட்

தா ட ச்சீ.. இப்பென்ன பூடும்றீங்களா.. பூடாதுன்றீங்களா..?

 போவாது.. போவாது..

அப்படி சொல்லு.. யக்கூ...

ராஜா கைய வைச்சா... ஆ.. ஆ.. ஆ.. ஆ.. அது ராங்கா போனதில்லை..
         --- ----- ------ ------ --------------------- -------------------         ------------

இப்படித்தாங்க இன்னும் நம்ம ஹமாம் சோப்பு அம்மாக்கள் மாறாம எப்பவுமே நம்மை திட்டிக்கிட்டே இருக்காங்க..

நாமெல்லாம் யாருங்க..`?

சும்மா அந்தர் பன்ன வேண்டாமா...?

ம்ம்..  சரி விசயத்துக்கு வருவோம்..

பொதுவாக காலேஜ் முடிந்த இரண்டு வருடமா நம்ம இளைஞன் படுற பாடு தாங்க
  
Read more ...

ஆக்சுளி, ''சோ'' வை எப்படி வெளியேத்தரதுனா...?

என்னதான் பிரச்சனைனே தெரியலீங்க., எவ்வளவோ முயற்சி செஞ்சாலும் இந்த '' '' ''சோ '' வை மறந்துடலாம்னு பார்த்த முடியவே மாட்டிங்குதுங்க.. இதனால என்னை எத்தனை பேர் கேலி செய்யறாங்க தெரியுங்களா..? எப்படிங்க இந்த பழக்கத்தை விடறது..?

       ஆக்சுளி என்ன பிரச்சனைன., ஓப்பான சொல்லிடறேங்க.. ( ஆன, இது கம்பனி சீக்ரெட் ''சோ'', யாருக்கிட்டயும் சொல்லிடாதிங்க... )

    நாம தினம் தினம் எவ்வளவோ மொக்கை போடுறோம்,, அதுல அடிக்கடி நாம பேசும் போது நமக்கே தெரியாம ஆக்சுளா நாம சில வார்த்தைகளை பேசுவோம். அதாங்க 'சோ', 'அதாவது', 'இப்ப பாத்திங்கன்ன', போன்ற வசனங்களை அடிக்கை உபயோகப்படுத்துவோம்.  இது சில சமயங்களில் ஏன் பல சமயங்கலில் எதிரில் கேட்பவர்களுக்கு எரிச்சலை உண்டாக்கும்..
பக்குவமான பேச்சாளர்கள் கூட தங்களுக்கென்றே சில பிரத்யேக வர்த்தகளால் மேடைகளில் அவசஸ்தை படுவதை நாம் பார்க்கிறோம் தானே.. ஆக்சுளா நான் என்ன சொல்ல வரேன்னா.., இப்படி நாமக்கே தெரியாம நாம சில வார்தைகளை அடிக்கடி உபயோகப் படுத்துவதை குறைப்பது அல்லது நிறுத்துவதற்கான தீர்வு என்ன...? அப்படிங்கறதுதாங்க..?

அட இது ஒரு விசயமாப்ப..?

    ஆமாங்க நாமெல்லாம் யாருங்க தொழில் முனைவோர்... அதாங்க பிசினெஸ் மேக்கனைட்டு.. நாம எப்போதாவதல்ல எப்பவவுமே மீட்டிங் போட்டே ஆகனுமுங்க..   ஆக்சுவளா..,  மார்க்கெட்டிங் வேலை பார்க்கரவங்கள கேட்டு பாருங்க மாச கடைசில அவங்க சீனியருங்க மீட்டிங்க போட்டு பன்னற அட்டூளியங்கள் இருக்கே.... ம்ம் அய்யய்யய்யோ... மார்க்கெட் ரேசியோவ உயர்த்த காய்ச்சி எடுத்துருவாங்க.. அப்படி, மீட்டிங்குங்கற பேருல மூனு மணி நேரம் தெனற தெனற பேசுவாங்க பாருங்க பேச்சு...

ஏன் நம்ம எம்.எல்.எம் பார்ட்டிங்க..? ( ஓசில டீ வாங்கி கொடுத்ததும் பின்னாடியே வந்தில்ல அனுபவி மவனேனு )  சும்மா பேசியே காதை புண் ஆக்கிடுவாங்க...

பேசுனவன் புழைச்சுப்பான். கேட்டவன் கதி..?

அவனும் பேசனும்ல...,

ஆமா,   ஆக்சுளி நான்இத பத்தி பேச வரலியே...

ம்ம்..

நாம பேசும் போது இடையில பேசர தேவை இல்லாத சொற்களை நிப்பாட்டறதற்க்கு என்ன வழி..?


  • அதுதான் தேவையில்லாத சொல் ஆச்சே அதைய ஏன் பேசனும்..? அப்படின்னு மனசுல பதிவு பன்னிக்கனும்
  • முதல்ல என்ன பேசப்போறோம் என்பதை தீர்மானித்து பேசறது நல்லது
  • ஆக்சுளா, நாம பேசும் போது ஒருதறம் அதை ரெக்கார்டு பன்னி வைச்சுட்டு திரும்ம அதை போட்டு கேட்டு பார்த்து எந்தெந்த இடத்தில நாம எந்த வார்த்தையை எதற்காக பேசறோம்னு பார்த்து அதை சரி பன்னிக்கலாம் (அப்பத்தானே கேக்குறவன் பாடு என்னன்னு புரியும் )
  • மனசுல கான்பிடென் வேனும் மச்சி.. ம்ம்ம் தன்னம்பிக்கையோட பேசுங்க எந்த இடத்திலேயும் மிஸ் ஆகாது
  • எதை பேசறோம்ங்கரத தெளிவா புரிஞ்சு பேசுங்க.. பொது மேடையோ அல்லது டீக்கடை பெஞ்ச்சோ வார்த்தைகளின் ஆழம் அதை வாசிப்பதை பொருத்தே புலனாக்கம் அடைகின்றது என்பதை புரிந்து செயல்படுங்கள்
  • அடிக்கடி நான் இப்பெல்லாம் 'அந்த'  வார்த்தையை பேசரதில்லையே அப்படின்னு உங்களுக்கு நீங்களே சொல்லி பழகிக்கங்க.. மனசுக்கு புரிய வைச்சாச்சுனா அப்பறம் கவலையை விட்டடலாம்..
  • எல்லாத்தையும் காட்டிலும் முதல்ல நிறையா மேடை பேச்சோ அல்லது மத்தவங்க பேசும் போதோ கூர்ந்து கவனிச்சு பழகுங்க. எப்பவுமே நாம எந்த விசயத்தையுமே கவனிச்சுட்டு வந்தோம்னா அதுல பிரச்சனை வராது
  • ஆக்சுளா நாம மத்தவங்க பேசும் போது காதுகளை கூர்மையாக வைத்து கவனிக்க ஆரம்பிச்சோம்னா அந்த பேச்சு நம்ம மனசுல பதியும்.' சோ' அடிக்கடி டீவி யோ அல்லது பொது மேடையோ நல்ல அறிஞர்களின் வார்த்தைகளை கேளுங்கள்  
  • உங்களுக்கு மிகவும் பிடிச்ச தலைப்பில் நீங்களே ஒரு பத்து நிமிடம் கண்ணாடி முன்னாடி நின்னு பேசி பாருங்க.. ( வரலாறு முக்கியம் அமைச்சரே )
ஆக்சுளா.......  எனக்கொரு பிரச்சனைங்க யாரவது வழி சொல்லுங்க....?
Read more ...

சக்க போடு போடு ராஜா.. உன் காட்டுள மழை பெய்யுது..

" பெருசா யோசிச்சா தான் சாதிக்க முடியும் " நீ கண்டிபா சாதிப்பே.. பெருசா யோசி பீமா... சுட்டி டிவி ஜக்கி சான் பார்த்துக்கொண்டிருந்தேன் அப்போ ஜூலி பீமா கிட்டே இததான் சொன்னா.. உடனே கிளிக் ஆச்சு நாமும் டிரை பன்னித் தான் பார்ப்போமே.. அப்டினு தான் கொஞ்ம் நடைய மாத்தலாம்னு இந்த பதிவு...


  தொழில் எதுவாயினும் செய்யும் தனிதன்மை தானே வெற்றியை தீர்மானிக்கிறது..?

ம்ம்.. சரிங்க.,,,,

        என்னக்கா வூட்டுல இவ்லோ பெரிய கூட்டம்..?

   எங்கூட்டுக்காரரோட தம்பி பையன் அருணு எவனோ கூறு கெட்டவன கூட்டிட்டு வந்து சோப்பு விக்கெரேன் சீப்பு விக்குரெனுட்டு அக்கப்போரு பன்னிட்டிருக்கன்டி.. நானே விபரம் தெரியாமத் தான் பார்த்திட்டு இருக்கேன்ற இவ வேற...

( மொத்தமாக ஆறு பிளாஸ்டிக் சேரு. அதுல ஐந்துபேரு.. அப்படியே திண்ணையில வெத்தலைய கொத்துனபடி ரெண்டு பெருசுங்க சகிதமா இருக்குற இந்த சுச்சுவேசன் சூலூரை தாண்டி ஒரு பாப்பம்பட்டி கிராமமும்னு வைச்சுக்குவேமே..)



    ஏம்ப்பா அருணு எங்க பெரிப்பா ஊர்ல நிறையா பேர தெரியும்னு டெமோ காட்டரதுக்கு என்னைய கூட்டிடு வந்தே பச்ச தண்ணியாவது கண்ணுல காட்டுப்பா. (...இவருதாங்க மாசம் அறுபதாயிரதுக்குமேல சம்பாதிக்குற சீனியர்  MLM பிஸினஸ் மேனுங்க.. பேரு சத்ய மூர்த்தி )


    பொருங்க சார்.. முதல்ல நீங்க புராடெக்ட்ட பத்தி எதையாவது ஒலரி எனக்கு கீழ எவனையாது ஜாய்ன் பன்னி விடுங்க அப்பரம போகும் போது கவனிக்கறேன்..

அடப்போபா.. நானும் நாலு மணி நேரமா கட்டம் எல்லாம் போட்டு காட்டுரேன் இருக்கிற நாலு பேரும் அவங்க அவங்க ஜோலிய தானே பாக்குராங்க..

   அதெல்லாம் எனக்கு தெரியாது என்னை சேர சொல்லும் போது என்ன சொன்னிங்க நீ சேர்ந்தா மட்டும் போதும் உனக்கு கீழ ஆட்களை நானே போட்டுக்கரேன்னிங்க இப்ப என்னடான்னா எனையவஏ புடிக்க சொல்லுரிங்க.., அப்பவே இதெல்லாம் எனக்கு சரிப்பட்டு வராதுன்னேன்.. கேக்கல.., அனுபவிங்க.., இல்லைன நான் கட்டுன காசயாது திருபி கொடுங்க..

அட நீ வேற..,

ஏங்க எல்லோரும் இங்க கவனிங்க..,

அம்மா சலவைக்கு போட்டதெல்ல கொண்டாந்திருக்கேன்.. ( இது டோபி கோபி )

வாடா வாடா.. காலைலயே தரேன்னியேடா.. ஏ லேட்டு....

என்னம்மா பன்றது., பொன்டட்டிக்கு உடம்பு சரில்ல அதானுங்க...   இதென்னங்மா யாரு அந்த வாத்தியாரு வட்டா வட்டமா போட்டு காட்டிட்டு இருக்காரு..

அவரு சோப்பு விக்கரவன்டா கோபி...

அம்மா எனக்கு சலவை பன்றதுக்கு கிடைக்குமாம்மா..?

அவன்கிட்டயே கேளு..

சாரே... இந்தா சாரே... எனுங்கோ வாத்தியாரே...

வாத்தியாரா ..?  சொல்லுங்க...,

எனக்கு சோப்பு வேனுமுங்க... நீங்க விக்கரிங்கலாமா எனுங்க வாத்தியாரு தொழில்ல வருமானம் போதலிங்களா..?

உங்க பேரு என்னங்க..

கோபிங்க சாமி..

மிஸ்டர் கோபி.., நீங்க தப்பா நினைச்சுட்டிருக்கீங்க.. நாங்க தொழில் வாய்பு மூலமா லட்சக்கணகுல பணம் சம்பாதிக்க வாய்பை ஏற்படுத்த வந்திருக்கோ.. இது வெறும் சோபு விக்கிற கம்பெனி அல்ல.. ஏன் நீங்க கூட மாசம் லட்சத்துக்கும் மேல சம்பாதிக்களாம்..,

அட டே இன்சூரன்சு கம்பனியா..? பொலப்பு கெட்டவங்கய்ய .. எம் பொலப்ப வெற கெடுக்கப்பாக்குறீங்களா..?

நோ.. நோ.. நாங்க அன்றாட யூஸ் பன்னுற பொருட்கள் மூலமா வருமானம் வர வெபோம்... உங்க செலவையே வருமானமா ஆக்கிடுவோம்..

ஆமா கிளிச்சிங்க... ஏன்ய உங்களுக்கு வேற வேலையே கிடைக்கிலயா..
ஏன்சாமி எம் பொலப்புல மண்ணல்லி போட பாக்குரிங்க.. இருக்குரத விட்டுட்டு பறக்கறதய புடிக்குறதூ.. ஆள விடுங்க...

இல்லை கோபி...

அட போங்க சாமி.. என் கழுதைய விட மோசம நானு வேலை பாக்குறேன் சல்லி காசு கூட பாக்க முடியல.. லச்சமாம் கோடியாம்...

நான் கூட பேங்க்ல பத்தாயிரம் சம்பளத்தில இருந்தேன். இப்ப பாருங்க மாசம் அறுபதாயிரதுக்கு மேல சம்பாதிக்கிறேன்..

அட நிஜமாங்களா...?

............

............
............
............
............


கண்டிபா எல்லாமே சாத்தியம் தாங்க.. என் பெரு கோபி நான் கூட ரென்டு வருசத்துக்கு முன்னாடி வரைக்கும் சலவை தொழி தாங்க செஞ்சிட்டு இருந்தேன்...

இப்ப......



( காலம் மாறலாம், கொண்ட காட்சிகள் மாறுமா..?)








Read more ...